காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதால் தான் அவன் இறந்தார். அதனால் கொலை வழக்காக இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிபந்தனையின்றி போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிய இயக்கங்கள் எழுப்பின.
இந்நிலையில், நேற்று மாலை, 4 மணிக்கு சில அமைப்பினர், பள்ளிகொண்டா போலீஸ் ஸ்டேஷனை, முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆம்பூரில் 5 டி.எஸ்.பிகள் தலைமையில் ஐநூறுக்கும் அதிகமான போலிஸார் குவிக்கப்பட்டனர். வேலூர் சரக காவல்துறை தலைவர் தமிழ்ச்சந்திரன், எஸ்.பி செந்தில்குமாரி ஆம்பூர்க்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்லாமிய இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து 1000 த்திற்கும் மேற்பட்டோர் சென்னை பெங்களுரு தங்க நாற்கர சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் போலீசாருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் எஸ்.பி. செந்தில்குமாரி உள்பட 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பத்திரிக்கையாளர்கள் கல்வீச்சில் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், ஆம்பூருக்கு விரைந்தார். நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
போலீசார் கைதியை அடித்ததே தவறு. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தான் தோன்றி தனமாக நடந்து கொண்டால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லை. மாஜிஸ்த்ரெட் முன்னிலையில் விசாரணை செய்யாமல் ஐந்து நாள் போலீஸ் விசாரணை என்பது ஏற்றுகொள்ளகூடியது இல்லை. போலீஸ் அடித்தால் மக்களும் திரும்பி அடிக்க வேண்டும் எனபதை ஆம்பூர் மக்கள் நிருப்பித்துள்ளார்கள். அப்பொழுது தான் இதற்க்கு ஒரு விடை கிடைக்கும்.
ReplyDeleteஒரு சில காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து வைத்து காசு பார்ப்பது தான் நடக்குது, அப்பாவி மக்களை கீழ்த்தனமாக நடத்துவது, அவர்கள் மீது பொய் காசு போட்டு உள்ளே தள்ளுவதும் சமீபத்தில் நமதூரில் நடந்தது அதனை வெளிப்படுத்தியும் யாரும் போராடுபவர்களுக்கு துணை போகவில்லை, ஆம்பூர் மக்கள் நம் சமுதாய மக்களுக்கு எடுத்துக் காட்டு, ஒற்றுமை என்றால் இப்படி தான் இருக்கணும்.