.

Pages

Sunday, June 28, 2015

அதிரை ஈசிஆர் சாலையில் மாட்டுவண்டி மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் காயம் - மாடு பலி !

அதிரை ஏரிபுறக்கரையை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் ( வயது 46 ). இன்று அதிகாலை அதிரை ஈசிஆர் சாலையில் ஏரிபுறக்கரையிலிருந்து அருகே உள்ள ராஜாமடம் கிராமத்திற்கு எருது உரத்தை அள்ளிவரச் சென்றார். அதே சாலையில் திருவாரூரிலிருந்து அம்மாபட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனம் மாட்டுவண்டியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது . மற்றொரு மாடு படுகாயமடைந்தது. மாட்டுவண்டியை ஓட்டிச்சென்ற ராமகிருஷ்னன் லேசான காயங்களுடன் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

தகவலறிந்த அதிரை போலீசார் மற்றும் நெடுஞ்சாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பலத்த சேதமடைந்த வாகனத்தை ஈசிஆர் சாலையிலிருந்து அப்புறப்படுத்த போலீஸ் டிப்பர் வாகனம் வரவழைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. அதிகாலை நிகழ்ந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
 
 
 

1 comment:

  1. சில நேரத்தில் உண்மை செய்திகள் மறைந்துவிடுகின்றன, இந்த செய்தியில் ஒரு மாடு இறந்தவிட்டது என்பது பொய்யான செய்தி இன்று 30.08,2015 அந்த மாடு உயிருக்கு போராடும் நிலையில் அடிப்பட்ட இடத்திலேயே கிடக்கின்றது, மீடியா ஏன் அப்டேட் செய்யவில்லை, அரசியலா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.