கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் கல்லூரி ஒன்றில் இறுக்கமாக, கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், நடக்காவு பகுதியில் முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு பயிலும் மாணவிகள் இனி இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களையும், தொப்புளை காட்சிப்பொருளாக்கும் குட்டை மேல்சட்டைகளையும் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவிகளுக்கு வரும் ஜூலை 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. அன்றிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு சீருடையாக சுரிதார்- சல்வார் மற்றும் துப்பட்டாவுக்கு பதிலாக ‘ஓவர்கோட்’ கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து, தலைக்கு துப்பாட்ட அணிந்து வரலாம் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவிற்கு சீனியர் மாணவிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கல்விக்கழகத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இக்கல்லூரியின் உத்தரவிற்கு பெற்றோர்கள் அதிக ஆதரவளித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.