.

Pages

Tuesday, June 30, 2015

காதிர் முகைதீன் கல்லூரி நடத்திய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தமிழ்நாடு மாநிலக் குழுவின் நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான நவீனத் தொழில் நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, உயிர் உரங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ ஜலால் தலைமை வகித்து உரை ஆற்றினார். காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் துணை முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன் துவக்க உரை ஆற்றினார்.

புதுக்கோட்டை உள்ளூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.
வெங்கடாசலம், கவுன்சிலர் திலகவதி சுப்ரமணியன், காதிர் முகைதீன் கல்லூரி கணிதத்துறை தலைவர் எஸ். சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் குறிக்கோள் மற்றும் இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் பி. குமாராசாமி எடுத்துரைத்தார்.

முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் எஸ். ரவீந்தரன் வரவேற்புரை ஆற்றினார்.

விவசாயிகளுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நவீனத் தொழில் நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, உயிர் உரங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பட்டுக்கோட்டை விவசாய உதவி இயக்குனர் ( ஓய்வு ) எம்.எம் கணேஷன், காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஏ அம்சத், ராஜா சரபோஜி அரசு கலை கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ஜி. ஸ்ரீதரன், தென்னை ஆராய்ச்சி மைய மண்ணியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். மோகன்தாஸ் ஆகியோர் விளக்க உரை அளித்தனர்.

நிகழ்ச்சி முடிவில் கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் கே. முத்துகுமாரவேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கிராம விவசாயிகள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.