.

Pages

Friday, June 26, 2015

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கலால் துறை சார்பில் உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: உலக போதை பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு போதை பொருட்களின் கெடுதல்களை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் போதை பொருட்களின் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பதாகைகளையும் ஏந்தி சென்றனர்.

இளைஞர் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு போதைப் பொருள் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கை வீணாக கூடாது என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், பெற்றோர்கள் அதனுடைய தீமைகள் குறித்து தங்களுடைய குழந்தைகளுக்கு படிக்கின்ற காலத்திலேயே எடுத்துச் சொல்ல வேண்டும்.  இதனால் எதிர் காலமே வீணாகி விடும். உடல் நிலை கெட்டு, சமுதாயத்தில் மதிப்பு குறைந்து போகும் என்பதால் பொது மக்கள் யாரும் போதை பொருள் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.  விழிப்புணர்வு பேரணியை பார்வையிடுகின்ற பொது மக்கள் அதன் தீமைகள் குறித்து மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுமாறு உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு என்னுடைய வேண்டுகோளாக வைக்கின்றேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

பேரணியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.திருவளர்செல்வி, கலால் துறை உதவி ஆணையர் திரு.காளிஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.