.

Pages

Saturday, June 20, 2015

AJ ஜூம்மா பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் !

AJ  நகரில் அமைந்துள்ள AJ ஜூம்மா பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு 30 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக பள்ளிக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், பள்ளியின் மக்தபா ஹிதாயா வளாகத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளியில் நடைபெறும் தராவீஹ் தொழுகைக்கு பின் 'ஹிஜ்பு' நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இந்த பள்ளிக்கு கஞ்சி விநியோகிக்க விரும்புவோர் பள்ளி நிர்வாகியின் கீழ்கண்ட அழைப்பேசியில் தொடர்பு கொண்டு உதவலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பள்ளிக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாக செலுத்தலாம்.
N.U சாகுல் ஹமீது 
0091 9791807205

வங்கி விவரங்கள்:
A.J. JUMA MASJID 
PANDIAN GRAMA BANK
ADIRAMPATTINAM BRANCH
A/C NO. 786786786


2 comments:

  1. மாஷா அல்லாஹ் ....
    ஒரு வேண்டுகோள்
    அதிரை மீடியாக்களில் இந்த பள்ளியை பற்றி செய்திகள் பதியும்போது AJ ஜும்மா பள்ளி என்று குறிப்பிடுவது தாள சிறந்தது .

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக்காட்டிமைக்கு நன்றி !

      'ஜும்மா' என்ற வார்த்தை பதிவின் தலைப்பில் சேர்க்கப்பட்டது.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.