.

Pages

Thursday, April 7, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கழகம் ஆண்டு விழா !

அதிராம்பட்டினம்  ஏப்- 07
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். பேராசிரியர் முனைவர் எம். சிக்கந்தர் பாஷா, பேராசிரியைகள் திருமதி எம். ஏ தஸ்லீமா, இ. பிளோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுக உரையை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன் வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆந்திர பிரதேசம் திராவிடன் பல்கலைகழக ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் திருப்பதி ராவ் விழா பேருரை ஆற்றினார்.

முன்னதாக தமிழ்த்துறை தலைவர் முனைவர் கலீலுர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் ஏ.ஐயப்பன் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதுகலை முதலாம்  ஆண்டு மாணவி ஐஸ்வரர்யா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி ஆர். நாகஜோதி நன்றி கூறினார்.

இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.