.

Pages

Tuesday, February 19, 2013

அதிரையில் ரூ 1.05 கோடியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் !

தமிழக அரசின் சார்பாக 2012-13 ஆம் ஆண்டு நிதியாண்டில் பதிவுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடுகள் நிகழாமல் கண்காணிக்கவும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பதிவுத்துறை அலுவலகம் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்க தமிழக அரசின் சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்று. அதிரை சார்பதிவாளர் அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுமானப் பணிக்காக ரூபாய் ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, உடன் இவற்றை செயல்படுத்த ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிரை ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சார்ந்த சகோ. ஜஹபர் அலி அவர்களின் சார்பாக ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே அதிரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

5 comments:

  1. நல்ல தகவல் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    நல்ல முயற்சி, பாராட்டுகிறேன், வரவேற்கின்றேன், ஒரு சில பேர்களுக்கு ஹல்வா கி்டைத்தமாதிரி, அதேசமயத்தில் ஒரு பெரிய நரி அல்லவா குறுக்கே போயுள்ளது.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. இலவசமாக கொடுப்பது நன்று கொடுத்த அவர்களுக்கு பாராட்டுக்கள் ஆனால் இந்த இடம் வசதியாக இருபவர்களுக்கு மட்டும் பயன் அளிக்க கூடியது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.