பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர் ஆன் ஹதிஷை மட்டும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
2. அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்த்லிருந்து கடைத்தெரு வழியாக மகிழங்கோட்டை செல்லும் சாலையை புதிய தார்சாலையாக போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி சம்மந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்..
3. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு இருக்கின்ற தனி இடஓதுக்கீட்டீனை உயர்த்தி தருவோம் என்று திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
4. முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று விஷ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மனஉறுதியை பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
5. விஷ்வரூபம் திரைபடத்திற்கு ஆதரவாக பேசிய அதிரை சேர்மன் அஸ்லத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
6. அப்சல் குருவை தூக்கிலிட்டு நீதியை சாகடித்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்
7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நிஜாம் ,
ReplyDeleteஅழகிய போட்டோக்கள்,தீர்மானங்களுடன் கூடிய சிறந்த பதிவு.இப்போ என்ன பண்ணுவீங்க என்று ஒரு அதிரை தளத்தை கேட்க தோன்றுகிறது .
மாஷாஅல்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நிஜாம் ,
ReplyDeleteஅழகிய போட்டோக்கள்,தீர்மானங்களுடன் கூடிய சிறந்த பதிவு.( அல்லாஹ் அக்பர் )இப்போ என்ன பண்ணுவீங்க என்று ஒரு அதிரை தளத்தை கேட்க தோன்றுகிறது.
மாஷாஅல்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி
காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக்க தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் ஹைர், மிக மிக வரவேர்ககூடிய தீர்மானம்.
பதிவுக்கு நன்றி.!
ReplyDeleteதீர்மானங்கள் அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியதே..!
வாழ்த்துக்கள்.
//7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.//
ReplyDeleteஇந்தத் தீர்மானம் அடிப்படையில் சரியாக சம்பந்தப் பட்டோரிடம் உண்மையை விசாரிக்காமல் போடப்பட்ட தீர்மானம். இது தொடர்பாக அதிகாரம் பெற்ற "தல" இடம் விசாரித்ததில் சில உண்மைகள் வெளிப்பட்டன. அதைப் பகிர விரும்புகிறேன்.
எதிர் வரும் பிப்ரவரி கடைசி வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்குரிய வெள்ளிக்கிழமைகளில் அரசு நடத்தும் தேர்வுகள் கால அட்டவணை இடப்பட்டு இருப்பதால்
- அந்த குறிப்பிட்ட ஆறே ஆறு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தேர்வுகள் ஒட்டு மொத்த தமிழ்நாடு முழுமைக்கும் நடை பெற இருப்பதால் அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை விடுவது பள்ளிகளுக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. அன்று விடுமுறை விடப்பட்டால் நமது பிள்ளைகள் அரசு நடத்தும் தேர்வை தவற விடும் நிலை இருக்கிறது.
ஆகவே அந்த வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட இருக்கிறது.
மற்றபடி கட்டிட வேலைகளுக்கே வெள்ளி விடுமுறை அறிவித்த ஊரில் பள்ளிகளுக்கு வெள்ளி விடுமுறையை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லையாம்.
அத்துடன் உபரிச் செய்தி : அந்த ஆறு வெள்ளிக் கிழமைகளிலும் தேர்வுகள் எழுதும் நமது பிள்ளைகள் ஜூம் ஆ வைத் தவற விடாமல் இருப்பதற்காக தரக்ர்தெரு ஜூம் ஆ பள்ளியில் சற்று தாமதமாக ஜூம் ஆ தொழுகை நடத்தவும் ஏற்பாடாகி உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிந்தது நேராக தர்கர்தெரு சென்று ஜூம் ஆ தொழுகைக் கடமையை நிறைவேற்றலாம். இன்ஷா அல்லாஹ்.
இப்படி எல்லா இயக்கங்களும் முதலில் தக்வா பள்ளி அருகில் போட்டி போட்டுக் கொண்டு பொதுக்கூட்டங்கள் நடத்துவதை நிறுத்தி வேறு இடங்களுக்கு இவற்றை மாற்றினால் பெண்கள் மேல் நிலைப் பள்ளியும் அருகில் வசிக்கும் மாணவ மணிகளும் நன்றி கூறுவார்கள். இது பற்றி யாராவது ஆக்கபூர்வமான தீர்மானம் போடுங்களேன்.
// இந்தத் தீர்மானம் அடிப்படையில் சரியாக சம்பந்தப் பட்டோரிடம் உண்மையை விசாரிக்காமல் போடப்பட்ட தீர்மானம். இது தொடர்பாக அதிகாரம் பெற்ற "தல" இடம் விசாரித்ததில் சில உண்மைகள் வெளிப்பட்டன. அதைப் பகிர விரும்புகிறேன்.
ReplyDeleteஎதிர் வரும் பிப்ரவரி கடைசி வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்குரிய வெள்ளிக்கிழமைகளில் அரசு நடத்தும் தேர்வுகள் கால அட்டவணை இடப்பட்டு இருப்பதால்
- அந்த குறிப்பிட்ட ஆறே ஆறு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தேர்வுகள் ஒட்டு மொத்த தமிழ்நாடு முழுமைக்கும் நடை பெற இருப்பதால் அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை விடுவது பள்ளிகளுக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. அன்று விடுமுறை விடப்பட்டால் நமது பிள்ளைகள் அரசு நடத்தும் தேர்வை தவற விடும் நிலை இருக்கிறது.
ஆகவே அந்த வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட இருக்கிறது.
மற்றபடி கட்டிட வேலைகளுக்கே வெள்ளி விடுமுறை அறிவித்த ஊரில் பள்ளிகளுக்கு வெள்ளி விடுமுறையை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லையாம்.
அத்துடன் உபரிச் செய்தி : அந்த ஆறு வெள்ளிக் கிழமைகளிலும் தேர்வுகள் எழுதும் நமது பிள்ளைகள் ஜூம் ஆ வைத் தவற விடாமல் இருப்பதற்காக தரக்ர்தெரு ஜூம் ஆ பள்ளியில் சற்று தாமதமாக ஜூம் ஆ தொழுகை நடத்தவும் ஏற்பாடாகி உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிந்தது நேராக தர்கர்தெரு சென்று ஜூம் ஆ தொழுகைக் கடமையை நிறைவேற்றலாம். இன்ஷா அல்லாஹ். //
தெளிவான விளக்கமாக இருக்கின்றது !
தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளையினர் இக்குறிப்பிட்ட தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நிஜாம்
ReplyDelete//தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளையினர் இக்குறிப்பிட்ட தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுங்கள்.//
இந்த விளக்கத்தில் நியாயம் இருக்கிறது சகோதரா ஆனால் உண்மை இல்லை .தமிழ் நாடு அளவில் பரீட்சை வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் போது எங்கள் ஊர் பள்ளிக்கு மட்டும் மாற்றி வையுங்கள் என்று கேட்கும் அளவுக்கு மதியற்ற நிர்வாகம் இல்லை நம் நிர்வாகம் .தல இடம் கேட்கும் முன் அங்கு படிக்கும் பிள்ளைகளிடம் கேட்டு இருக்கலாம் .சாதாரண வெள்ளிகிழமைகளில் கடந்த சில வாரங்களாக பரிட்சை நடக்க வில்லை
இப்பவும் நாம் சொல்வது பரீட்சை இல்லாத சாதாரண நாட்களில் பள்ளிக்கூடம் நடக்கும் சாதாரண வெள்ளிகிழமையை பற்றி மட்டும் தான் .பரீட்சை நடக்கும் அசாதாரண வெள்ளிக்கிழமையை பற்றி அல்ல
சகோ. நிஜாம் மற்றும் அன்சாரி
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
தீர்மானம் இதற்கு முன் வெள்ளிக்கிழமை பள்ளி நடத்தப்பட்டதை பற்றி பேசுகிறது. நீங்கள் சொல்லும் விளக்கம் எதிர்காலத்தை பற்றி பேசுகிறது. இரண்டும் வேறு. இதற்கு முன் வெள்ளிக்கிழமை நடத்தப்படவில்லை யென்றால் தான் தீர்மானத்தை வாபஸ் வாங்குவது சரி.
சமீப காலமாக வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்பட்டாதா? இல்லையா?
ReplyDeletezubair
அஸ்ஸலாமு அலைக்கும்
மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' என்ற தலைப்பில் மிக உருக்கமாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது இடையில் மைக்கை வாங்கி சகோதரர் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பற்றிய தீர்மானம் வாசிக்கும் பொழுது வெளியூர்களில் இருந்து வந்த நபர்கள் இவர்கிட்ட யாரப்ப மைக்க கொடுத்தது என கூறியது காதில் விழுந்தது. ஆகவே இதுப்போல இடையில் மைக் வாங்கி பேசுவதை பற்றி மறுபரிசிலனை செய்து சம்பந்தப்பட்ட சகோதரரிடம் கூறுங்கள்.
வஸ்ஸலாம்.
// இந்த விளக்கத்தில் நியாயம் இருக்கிறது சகோதரா ஆனால் உண்மை இல்லை .தமிழ் நாடு அளவில் பரீட்சை வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் போது எங்கள் ஊர் பள்ளிக்கு மட்டும் மாற்றி வையுங்கள் என்று கேட்கும் அளவுக்கு மதியற்ற நிர்வாகம் இல்லை நம் நிர்வாகம் .தல இடம் கேட்கும் முன் அங்கு படிக்கும் பிள்ளைகளிடம் கேட்டு இருக்கலாம் .சாதாரண வெள்ளிகிழமைகளில் கடந்த சில வாரங்களாக பரிட்சை நடக்க வில்லை
ReplyDeleteஇப்பவும் நாம் சொல்வது பரீட்சை இல்லாத சாதாரண நாட்களில் பள்ளிக்கூடம் நடக்கும் சாதாரண வெள்ளிகிழமையை பற்றி மட்டும் தான் .பரீட்சை நடக்கும் அசாதாரண வெள்ளிக்கிழமையை பற்றி அல்ல //
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கோரப்படும் [ இன்ஷா அல்லாஹ் ! ]
அரசின் பரிந்துரை அடிப்படையில் சில வாரங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்படுகின்றது என்றால், இதுகுறித்து மாவட்ட கல்விக்குழுவின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதுதான் நியாம்... மக்களை திரட்டி பள்ளிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவது என தீர்மானம் நிறைவேற்றிருப்பது நியாம் இல்லை.
மறு பரிசீலனை செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Great share,keep up the good work bro...
ReplyDelete//அரசின் பரிந்துரை அடிப்படையில் சில வாரங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்படுகின்றது என்றால், இதுகுறித்து மாவட்ட கல்விக்குழுவின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதுதான் நியாம்... மக்களை திரட்டி பள்ளிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவது என தீர்மானம் நிறைவேற்றிருப்பது நியாம் இல்லை.//
ReplyDeleteதம்பி நிஜாம். ஜசாக் அல்லாஹ் ஹைர்.
பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புப் படிப்பவர்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் அரசுத் தேர்வுகள் இருக்கும்போது மற்ற வகுப்புக்களுக்கும் வெள்ளிக்கிழமை வகுப்புகள் இருந்ததன என்று மாணவர்கள் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் சில வகுப்புக்களுக்கு விடுமுறையும் சில வகுப்புக்களுக்கு வேலை நாளும் என்று வைக்கும்போது பணியாற்றும் ஆசிரியர்கள் வாரத்தின் எல்லா நாட்களும் வேலைக்கு வரவேண்டி வரும் என்பதால்தான். இது முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகம் தொடர்பான விஷயம். தற்காலிக தவிர்க்க முடியாத ஏற்பாடுகள்.
இதை ஏதோ வருடம் முழுதும் வெள்ளி விடுமுறை ஒழிப்பு என்று தவறான புரிந்துணர்வின் தீர்மானத்தைத்தான் சுட்டிக்காட்டினேன். யாரையும் குறை சொல்லும் நோக்கமில்லை.
அறுபது வருடங்களுக்கு மேலாக கல்வி நிறுவனம் நடத்தி நம்மில் பலரை படிப்பாளிகளாக்கிய ஒரு நிறுவனத்தை ஒரு ஆதாரமில்லாத செய்திக்காக மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் செய்வது என்கிற வாசகங்கள் நன்றி பாராட்ட விரும்பும் பலரின் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்திவிட்டன.
மேலும் இது பற்றி விசாரித்ததும் விளக்கம் சொன்னதும் அல்லது சொல்லப் போவதும் இணைய தளங்களில் படிப்பவர்களுக்கே தெரியும். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தவறாகப் புரிந்து கொண்டு சென்ற மக்களுக்கு இந்த செய்திகள் எப்படி சென்று சேரும்?
அடுத்து தக்வாப் பள்ளி அருகில் பொதுக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவது பற்றி ஒரு சகோதரர் கூட கருத்துத் தெரிவிக்கவில்லையே. இனி வருவது மிகவும் சீரியசான தேர்வுகள் நேரம். நமது பொதுக் கூட்டங்களி குறைந்த பட்சம் தேர்வுகள் முடியும் வரையாவது தள்ளிவைக்கலாமே. இது ஒரு வேண்டுகோளே!
வெள்ளிக்கிழமை தவிர்க்க முடியாத தேர்வு என்பதால் அன்று ஜூம் ஆ தொழுகையை சற்று காலம் தாழ்த்தி வைத்துக் கொள்ள ஏற்பாடும் செய்த பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டி வேண்டுமானால் ஒரு தீர்மானம் போடலாம்.
ReplyDelete