.

Pages

Saturday, February 9, 2013

அதிரையில் கட்டிமுடித்தும் திறக்கப்படாமல் உள்ள மற்றுமொரு சுகாதார வளாகம் !


அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மேலத்தெரு. இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பெண்கள் பயன்படுத்தும் நோக்கில் திறக்கப்படாமல் இருப்பது இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பாழடைந்து காணப்படுகின்றன.

இந்த சுகாதார வளாகத்தை அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து திறப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

பேரூர் நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா !?

5 comments:

  1. இப்படி பொது மக்களின் அவசியத்தேவை பணிகளை செய்து முடித்து விட்டு திறந்து வைக்காததன் காரணம் தான் என்ன...?

    விடையை அதிரை பேரூராட்சி தான் தர வேண்டும்.

    ReplyDelete
  2. The urgent need is for people to build public on the stand

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    இப்படி பொது மக்களின் அவசியத்தேவை பணிகளை செய்து முடித்து விட்டு திறந்து வைக்காததன் காரணம் தான் என்ன...?

    விடையை அதிரை பேரூராட்சி தான் தர வேண்டும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. திறப்பது முக்கியமில்லை அதை பராமரிக்க வேண்டும்.அதுதான் அவசியம்.

    ReplyDelete
  5. அதிரை பேரூராட்சி இந்த விசையத்தில் செவி மடுக்குமா என்றும் பொருத்திருந்து பார்ப்போம். சகோதரர் ஹபீப் அவர்கள் சொல்வது போன்று இதை திறப்பது முக்கியமல்ல அதை பராமரிப்பு தான் முக்கியம் எனவே இன்னமும் காலம் தாள்தாமல் உடன் நடவடிக்கை எடுக்குமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.