.

Pages

Friday, February 22, 2013

தினத்தந்தி செய்தி : அதிரை பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்பட வில்லை !

கடந்த [ 20-02-2013 ] அன்று வெளியான தினத்தந்தி நாளிதழிலில் அதிரை பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்படவில்லை என்றும், புதிய பேருந்து நிலையம் உருவாக்க மத்திய மந்திரி பழனிமாணிக்கம் அவர்கள் ரூபாய் 38 இலட்சம் ஒதுக்கி உள்ளதாகவும் அதற்காக பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்ததாகவும் அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.


3 comments:

  1. அதிரை மற்றும் அதிரையைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய புதிய பேருந்து நிலையம் அமைத்திட வலியுறுத்தி நமதூரைச் சார்ந்த சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இது தொடர்பான கோரிக்கையை சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    கடந்த ஆண்டு நமதூருக்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களிடம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இன்னபிற முக்கிய கோரிக்கையுடன் நமது நேர்காணலில் அதிரை பொதுமக்களின் விருப்பத்தை நேரடியாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் அவர்களும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகக் கூறிச்சென்றார்.

    [ அவருடன் கூடிய நேர்காணலை பார்க்க... கிளிக் செய்க http://nijampage.blogspot.in/2012/08/mp.html ]

    வருகிற நிதியாண்டில் தனது தொகுதிக்கு கிடைக்கக்கூடிய மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அதிரையில் அமைப்பதற்காக ரூபாய் 38 இலட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக கடந்த [ 03-02-2013 ] அன்று அதிரை பேருந்து நிலையம் அருகே நகர தி.மு.கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களுக்கு பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. நமதூரின் நீண்ட நாள் கனவு நினைவாகுமா?எதிர் பார்போம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.