.

Pages

Tuesday, October 22, 2013

அதிரையில் நடந்த எளிய திருமணம் [ புகைப்படங்கள் ] !

அதிரை C.M.P லைனில் சார்ந்த சகோதரர் Y அன்சாரி அவர்களின் மகன் முஹம்மது அவர்களின் திருமணம் கடந்த 19.10.13 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மணமகனின் இல்லத்தில் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் துவக்க உரையாக சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களின் இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மணமகன் 38 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து திருமணம் முடித்து வைக்கப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் மணமகன் சார்பாக வலிமாவாக டீ மற்றும் பிஸ்கட் கொடுக்கப்பட்டது.





தகவல் : M.I அப்துல் ஜப்பார்

14 comments:

  1. மாஷா அல்லாஹ் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடையில் ஒருநாள் (வாசனைத் திரவத்தின்) மஞ்சள் கறையைக் கண்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றி வினவியபோது, ஒரு பேரித்தங் கொட்டையளவு தங்கத்தை மஹர் கொடுத்து திருமணம் செய்துள்ளதாக பதில் கிடைத்தபோது 'பாரகல்லஹு லக' என்று வாழ்த்தியதுடன், ஓர் ஆட்டை அறுத்தாயினும் வலீமா கொடுப்பீராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

    ReplyDelete
  3. தஞ்சை M P யும் பட்டுக்கோட்டை M L A யும் த த ஜவின் ஆதரவில் வெற்றி பெற்றவர்கள் அவர்களை திருமணத்திற்கு அழைத்தால் திருமணத்தில் கலந்துக்கொள்வார்கள் இருந்தாலும் இஸ்லாம் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பரக்கத் நிறைந்த திருமணம் என்று சென்னதால் பொருளாதாரம் இருந்தும் ஆடம்பரத்தை தவிர்த்தும் மணமகன் தன்னுடை நன்பர்களையும் தவிர்த்து நடத்தியதற்கு மணமகனும் அவரின் குடும்பத்தினரும் பராட்டுக்குறியவர்கள்

    ReplyDelete
  4. a. B. C. D. E. F. G. H. I. J. K. L. M. N. O. P. Q. R. S. T. U. V. W. X. Y. Y. Y. Z

    ReplyDelete
    Replies
    1. Don't Worry,

      He doesn't know how to start and finish.Look at his a and Z.
      The funny thing is, these kind of people blaming others for nothing :P

      Delete
  5. உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

    விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

    அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.
    (அல்குர்ஆன் 4:38)

    அதிரையில் பெருகி வரும் ஆடம்பர திருமனங்களுக்கு மத்தியில் நபி வழியில் நடைபெற்ற எளிய திருமணம் அல்ஹம்துலில்லாஹ்...!

    ‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி.

    பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    மாஷா அல்லாஹ் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  7. எளிய திருமணம், வறுமையில் திருமணம் என்றெல்லாம் வலைப்பதிவுகளில் செய்தி போடுறாங்க. எனக்கென்னமோ, "முதலிரவை தமது/பெற்றோர் இல்லத்தில் நடத்திய மணமகன்" என்று செய்தி வந்தால் தான், "ஆண்களை மாமியார் வீட்டுக்கு துரத்தி விடப்படும்" அதிரையில் சாதனையாக இருக்க முடியும்.

    # உடுத்திய கைலியுடன் திருமணம் முடித்தோர் ஆயிரக்கணக்கில் இருக்காங்கப்பா!
    # நாய் மனிதனைக் கடித்தால் செய்தி அல்ல, மனிதன் நாயைக் கடித்தால் தான் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும்
      செளியாங்குலத்துல தண்ணி வந்துடிச்சி மார்கெட் ல மீன் வந்துடிச்சி என்று செய்தி போட்ட போதெல்லாம் வந்து நாய் மனிதனை கடித்தால் செய்தி அல்ல மனிதன் நாயை கடித்தால் தான் செய்தி என்று கருத்து சொல்ல வராதவர் அதிரையில் திருமணம் என்றால் எப்படி நடந்து கொண்டு இருக்கிறது அதை மாற்றி இந்த இந்த திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்தால் இவர் சொன்ன உதாரணம் இங்கே எடுபடாது என்பதும் இவரின் கண்மூடித்தனமான ததஜ எதிர்ப்பு வெறியும் தான் இதில் இருக்கிறது என்பதும் படிப்போருக்கு விளங்கும்

      தவ்ஹீத் ஜமாஅத் எதை செய்தாலும் குறை சொல்ல வரும் குறைமதியுடையாருக்கு தான் இதை குறை சொல்ல முடியும்

      இதே திருமணம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வைக்காமல் வேறு தவ்ஹீத் சொல்லும் ஜமாஅத் நடத்தி வைத்து இருந்தால் அப்போ இந்த திருமணத்தில் பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தது தெரியுமா என்று செய்தி போட்டு ஆகா ஓகோ என்று சொல்ல வருவார்கள் என்பது நமக்கு தெரியாதா ?

      //
      # உடுத்திய கைலியுடன் திருமணம் முடித்தோர் ஆயிரக்கணக்கில் இருக்காங்கப்பா!//

      இப்படி உடுத்திய கைலியுடன் வந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு 50 பேரை பட்டியல் போட முடியுமா ?

      ததஜவுக்கு எதிராக எதையாவது சொல்ல வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கம்

      இந்த திருமணத்தில் மணமகன் பெண்வீட்டில் உள்ளார் என்று எதை வைத்து உறுதி செய்தீர் என்று விளக்க முடியுமா ?

      முன்பு இவர் ஒரு தளத்தில் செய்தி போட்டுக்கொண்டு இருந்த போது நாய் மனிதனை கடித்த செய்தியை செய்தியாக போட்டாரா அல்லது மனிதன் நாயை கடித்த செய்தியை செய்தியாக போட்டாரா என்பதை கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து பார்த்து விட்டு மறுபடி கருத்து பதிய வருவது நல்லது

      Delete
  8. Maahir have some water,we could see a smoke around you..

    மனிதன் நாயை கடிச்ச செய்தியை போட்டவனே இப்போ கமெண்ட்ஸ் மட்டும் போட சொல்லி கடிச்சி விட்டுட்டாங்களோ?

    தண்ணிய குடி....தண்ணிய குடி ...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.