"சகதி சாலையாக மாறிய வாய்க்கால் தெரு ! நடந்து செல்லும் பொதுமக்கள் அவதி !" என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தளத்தில் தலையங்க செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக அதிரையில் நேற்று பெய்த தொடர் மழையால் சாலை முற்றிலும் நாசமாகிவுள்ளது. இதனால் அப்பாதை வழியே செல்லும் பொதுமக்கள் பலர் வழுக்கி விழும் அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலை நீடிக்குமானால் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுவிடும் என்கின்றனர் அப்பகுதியில் வாழும்
பொதுமக்கள். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு சரிசெய்வதுதான் சிறந்தது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கடந்த [ 09-10-2013 ] அன்று தளத்தில் பதிந்த செய்தி :
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள செட்டியான்குளம் தூர்வாரப்படுவது அனைவரும் அறிந்ததே, பாராட்டுக்குறியதே !
புகைப்படம் -1: சகதிச்சாலையாக மாறியுள்ள வாய்க்கால் தெரு தார்சாலை
புகைப்படம் -2: சகதிச்சாலையாக மாறியுள்ள வாய்க்கால் தெரு தார்சாலை
ஆனால், குளத்தை தூர்வாரும்பொழுது அகற்றப்படக்கூடிய கழிவுகள் உரமாக பயன்படுகிறது. ஆதலால் அக்கழிவுகளை டிராக்டர்கள் மூலம் தேவையான இடங்களுக்கு எடுத்துச்செல்கிறார்கள். இதனால், 13-வது வார்டுக்குட்பட்ட வாய்க்கால் தெருவில் கடைத்தெருவை நோக்கிச்செல்லக்கூடிய தார் சாலை சில மாதங்களுக்கு முன்பு தான் சீரமைக்கப்பட்டது, தற்பொழுது அவ்வழியே செல்லக்கூடிய டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக கழிவுகளை ஏற்றிச்செல்வதால் சாலையில் கொட்டிக்கொண்டே செல்கிறது, இதனால், கடைத்தெருவை நோக்கிச்செல்கிற சாலையாக உள்ளதால் நடைபயணாளிகள் மற்றும் இருசக்கர வண்டிகளில் செல்லக்கூடியவர்கள் பெரும் சிரமத்திற்காளாகிறார்கள், மேலும் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக புதிதாக போடப்பட்ட தார் சாலை சகதியாக மாறி பலர் வழுக்கிவிழும் அபாயம் உள்ளது, மேலும் நோய் கிருமிகள் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஆதலால், சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் டிராக்டர்களில் அதிக கழிவுகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கக்கூடாது, மேலும் தார்பாய் போட்டு மூடி கழிவுகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும்.
இதை உடனடியாக கருத்தில் கொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம் ?
இது போன்ற கழிவுகள் மிக கொடுமையானது விரைவில் நடவடிக்கை எடுத்தால் நல்லது பேரூராட்சி நிர்வாகம்.
ReplyDeleteYengal theru seinagulam saalaiyum appadithaan erukku..15m vaard.
ReplyDeleteஇந்தவழியாக தான் கடந்த 5 வருடத்திற்கு முன்பு டிராக்டர் ஒன்று மண் இறக்குவதற்க்காக சென்ற போது ரோடுகளில் அமைந்துள்ள செப்டி டெங்க் உடைந்து ஒருவர் உயிரிழந்தார்.
ReplyDeleteஅதிரையில் உள்ள இதுபோல ரோட்டில் இருக்கும் செப்டி டெங்க்
முதல்ல இதையும் காலி செய்ய சொல்லுங்க பேரூர் தலைவர்ட்ட சொல்லி!!!
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மண் அள்ளிக்கொண்டு செல்வது என்பது முறையாக அரசிடம் அனுமதி பெற்று செய்யவேண்டிய பணி. இந்த நடைமுறைகளை பின்பற்றப்பட்டுள்ளதா !? என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ReplyDeleteமேலும் இதுகுறித்து காவல்துறையின் உதவியையும் பொதுமக்கள் நாட முயற்சிக்கலாம்.
சம்பத்தப்பட்ட வார்டு மெம்பெர், பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் போலிஸ் உதவியை நாடுவதென்றால் இவர்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியோ ? 4 நபர்கள் கூலி வேலைக்கு அனுமதித்து வேலைவாங்கினால் சுத்தம் செய்துவிடுவார்கள். செய்யுமா நிர்வாகம் ?
ReplyDeleteஇதுபோன்ற சமயத்தில் சேவை செய்வது தான் மிக முக்கியம். போற்றப்படுவார்கள்.
முதலில் இது சம்பந்தமாக பாதிப்புக்குள்ளான தெருவாசிகள் ஒட்டு மொத்தமாக சென்று பேரூராட்சியிடம் முறையிட்டு துரிதநடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டி உடனடியாக தீர்வுக்கான முயற்சி செய்ய வேண்டும். செவிசாய்க்காத பட்சத்தில் காலம் தாழ்த்தினால் வேறு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
ReplyDeleteவாய்க்கால் தெரு என்ற பெயரை உன்னமையாக்குவது போல் இருக்கிறது ? பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்தால் நல்லது,
ReplyDeleteAkka solluvalam thagkachchukku kalyanam pannanum anru......yaarum n'alla karuththi solluvarvagka anru paarththean onrum ella?allamea komale kathaya erukku.
ReplyDelete