.

Pages

Monday, October 21, 2013

அதிரைக்கு வருகை தந்த ரெங்கராஜன் MLA அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை !

அதிரைக்கு இன்று காலை திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த நமது சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் M.L.A அவர்களிடம் நமதூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர வசதி செய்து தருவது தொடர்பாக எதிர்வரும் [ 23-10-2013 ] அன்று தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு தாம் எடுத்துச்செல்வதாக உறுதியளித்துள்ளார்.

சந்திப்பின் போது அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் M.M.S. சேக் நசுருதீன், காங்கிரஸ் முன்னோடிகள் M.M.S. ஜமால் முஹம்மது, M.M.S. ரபி அஹமது, M.M.S. பஷீர் அஹமது மற்றும் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் துணைத்தலைவர் அதிரை மைதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3 comments:

  1. என்ன கோரிக்கை வைத்தாலும் ஒன்னும் நடக்காது! அதான் இவருக்கு ரிட்டையர்டு வயசு வந்துடுச்சே?!! ஆனால் ஒரு விஷயம் அடுத்த ஒட்டு இவருக்கில்லே. வேற யாருக்கோ....!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.