இன்று சுபுஹூ தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி காலை 7-45 மணிக்கு ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வரண்டு காணப்படும் நகரில் மழை பெய்ய வேண்டியும், ஒற்றுமை மேலோங்கவும் சிறப்பு துஆ ஓதப்பட்டன. மேலும் லெ.மு.செ. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் சிறப்பு துஆவும் இந்த மஜ்லிஸில் ஓதப்பட்டது.
ஊர் முக்கியஸ்தர்கள், மஹல்லா நிர்வாகிகள் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த சகோதரர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஜாவியா நிர்வாக கமிட்டியால் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைப்பெறும் இந்த மஜ்லீஸின் இன்றைய முதல்நாளில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜாவியா நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
யா அல்லாஹ்.! இந்த மஜ்லிஸின் பொருட்டால் எங்கள் ஊருக்கு ஒற்றுமையும் மழையையும் பொழியச் செய்வாயாக ஆமின்.!
ReplyDeleteயா அல்லாஹ்.! இந்த மஜ்லிஸின் பொருட்டால் எங்கள் ஊருக்கு ஒற்றுமையும் மழையையும் பொழியச் செய்வாயாக ஆமின்.!
ReplyDeleteகடைசி படத்தில் தண்ணீர் பிடிக்க படுக்கிறது இரண்டு நபர் அது ஏன் ஓதிய தண்ணீரா இல்லை சும்மா புகைபடதுக்காக வா ?
ReplyDeleteஇன்றைய பயானில் சொல்லப்பட்டதே "எண்ணத்தின் அளவே விளைவுகள் அனைத்தும்"" என்பதுதான்.
Deleteசகோதரர் ஹபீப் அவர்கள் எப்படி பார்கிறீர்களோ அப்படித்தான் அந்த நீரின் தன்மை அமையும். புனிதமான மஜ்லிஸ் அங்கு ஓதப்பட்ட ஹதீதுக்கும், பெருமானார் அறிவித்தபடி மலக்குகள் ஆஜரான மஜ்லிஸ், அங்கே கூடியவர்கள் உளத்தூய்மையுடன் ஓதி ஊதப்பட்ட தண்ணீர் நிச்சயமாக ஷீபாவை தரும், அதாவது அருந்துபுபவர் எந்த நோக்கத்தில் அந்த நீரை மதிக்கிறாரோ அதன் தன்மையை அல்லாஹ் அதற்கு அருள்வான், இன்ஷா அல்லாஹ்.
This comment has been removed by the author.
ReplyDeleteOur native people must avail this opportunity to sit in the majlis amidst the gathering of Malaayikaas.
ReplyDeleteWhy not the adirainews, adirai express record and broadcast bayaans from Zavia for those who are interested in listening from various parts of the world.
இன்று கேட்ட ஹதீஸ்:
ReplyDeleteஒருவருக்கு மட்டும் ஒது செய்யக் கூடியத் தண்ணீர். அதில் அண்ணனால் நம் பெருமானார்(ஸல்) அவர்கள் ஒது செய்துவிட்டு அப்பாத்திரத்தில் தன் கரங்களை வைக்க 1400 சஹாபிகள் ஒது செய்ய தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. (புகாரி ஷரீப்) அறிவிப்பாளர் அனஸ் (ரலி).
பெருமானார்(ஸல்) அவர்கள் தினம் ஒது செய்ய தண்ணீர் அங்கு இருக்கும். யார் கொண்டு வைக்கிறார்கள் என்பது புரியாதவண்ணம் அனஸ்(ரலி) (தனது 8 வயதிலிருந்து) அவர்கள் அந்த உயர்வான சேவை புரிந்திருக்கிரார்கள். அச்செயலுக்காக அண்ணலார்(ஸல்) அல்லாஹ் அவனிடம் அனஸ்(ரலி) அவர்களுக்காக துவா செய்தார்கள். அத்துவாவின்படி அனஸ்(ரலி) அவர்கள் பெரிய மார்க அறிஞராக திகழ்கின்றார்கள். அவர்களின்தொட்டு எண்ணற்ற ஹதீஸ்கள் நமக்கு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு வருட மழையளவு எப்போதும் குறைவதில்லை. மனிதர்களின் நன்மை தீமைக்கேற்ப மனிதர்களுக்கோ அல்லது கடலிலோ பெய்துவிடும்.
அங்கிருந்தவர்கள் சிலரின் முனுமுனுப்பு:
இந்த வருடம் நம் ஊரில் மழை மிக மிக குறைவு. அது நம் மக்களின் செயல்பாடுகளின் விளைவு.
அல்லாஹ்.! இந்த மஜ்லிஸின் பொருட்டால் எங்கள் ஊருக்கு ஒற்றுமையும் மழையையும் பொழியச் செய்வாயாக ஆமின்.!
ReplyDeleteஇன்றைய ஜாவிய நிகழ்வு:
ReplyDeleteஹல்ரத் ஜுனைதில் பகுதாதி அவர்களிடம் ஒரு மனிதன் தான் மிகவும் ஏழையாக இருக்கிறேன் எனக்கு அல்லாஹ் ஒன்றும் செய்யவில்லையே என்று வேதனைப்பட்டார். அதற்க்கு அவர்கள் உனது இரண்டு கண்களையும் எனக்குத் தா உன்னை செல்வந்தனாக ஆக உதவிகள் செய்வதாக கூறினார்கள். அம்மனிதன் நான் என் உறுப்பைத் தரமாட்டேன் எத்தனை கோடிகள் தந்தாலும் தரமாட்டேன் என்று கூறினான். உனக்கு அல்லாஹ் எல்லா நிஃமத்துக்களையும் தந்திருக்கிறான் எனவே அவனை குறை கூறாதே, அவனிடமே கேள் அவன் தருவான் என்று கூறினார்கள்.
இந்த கருத்தை மையமாக வைத்து விளக்கங்கள் கூறி முடிவுற்ற பின் ஹளரத் முகம்மது குட்டி ஆலிம் அவர்கள் கூறினார்கள். யாரையும் நீ செய்த இன்ன இன்ன காரணத்தினால் மழை பெய்யவில்லை என்று சொல்லாதீர்கள். ஒவ்வொருவரும் தவ்பா செய்யுங்கள்.
பெருமானார்(ஸல்) ஒவ்வொரு நாளும் தவ்பா செய்தார்கள். அன்னவர்கள் எத்தகைய மேன்மை மிக்கவர்கள் அவர்களே ஒரு நாளைக்கு 100 தடவை போல் பாவமன்னிப்பு அல்லாஹ் அவனிடம் கேட்டார்கள். எனவே யாரையும் உங்களது செய்கையால் தான் மழை பெய்யவில்லை என்று குறை கூறாதீர்கள். ஒவ்வொருவரும் தவ்பா செய்யுங்கள் என்று கூறினார்கள். இது போன்ற ஹதீதுகளை தக்க தருணத்தில் ஞாபகமூட்டும் ஆலிம் அவர்களை சிலர் வசை பாடுவதையும் காண்கிறோம்.
மேன்மக்கள் மேன்மக்களே.
இன்று புகாரி ஷரிப் ஹதீஸ்:
ReplyDeleteஈமானில் ஏற்றம் உடையவர் யார் ? என்பதை விளக்கும் விதமாக பெருமானார்(ஸல்) அன்னவர்கள் கேட்ட கேள்விக்கு சகாபா பெருமக்கள் 'மலக்குமார்கள் என்றார்கள்.'
"மலக்குமார்கள் அவர்கள் இறைவனோடு இருப்பவர்கள். அவன் சொல்வதை கேட்டு அப்படியே செய்பவர்கள்,அப்பை உலக பற்று அற்றவர்கள் என்றார்கள்."
'நபிமார்கள் என்றார்கள்.'
"உலகில் வாழ்ந்தாலும் தாமரை இல்லை தண்ணீர் போல் உலகில் இருந்து நபிமார்கள் இறைவனிடம் வஹி பெற்று செய்தியை அறிவிப்பவர்கள் என்றார்கள்."
'அவ்வாறானால் நாங்கள் சகாபாக்கள் என்றார்கள்.'
"சகாபாக்கள் ஆகிய நீங்கள் என்னோடு இருந்து என்னிடம் போதனைகள் பெற்றும் என் முஃஜிசத்துக்களை நேராக கண்டுவாழ்பவர்கள் என்றார்கள்.
எனக்கு பின் திருக்குர்ஆன் அதனை ஏற்றும், என் போதனைகள் அதனை ஏற்றும் பின்பற்றி நடப்பவர்கள். இவர்களே ஈமானில் ஏற்றம் பெற்றவர்கள் என்று கூறினார்கள்."
(இப்பயானை கேட்க்கும் என்மனதினில் தோன்றியது:
பெருமானார் இல்லாமல் அவர்களின் போதனைகள் இல்லை. பெருமானாருக்கு எத்தகைய உயர்வு கண்ணியம் தருகிறோமோ அத்தகைய உயர்வு கண்ணியம் அன்னவர்களின் போதனைக்கும் உண்டு, அப்பொழுத்தான் அன்நிலையினில்தான் அப்போதனையும் தெளிவாக விளங்கும். பெருமானரை புரிந்தால்தான் அன்னவர்களின் போதனையும் தெளிவாகப் புரியும், என்பது)
துவாவுக்கு பின் த்ப்ரூக் வழங்கும் நேரம் புண்ணியமாக செல்ல, ஹல்ரத் முகம்மது குட்டி ஆலிம் அவர்கள் :
தூத்துக்குடி போன்ற ஊர்களில் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு மழை பெய்தது என்று கேள்விப்பட்டோம். அல்லாஹ்(ஜல்) அவன் அடியார்களை சிறு சோதனைத் தந்தும் சோதிப்பான். சில சமயம் பெரும் சோதனையும் உண்டு. அதற்காக தவ்பா நினைவூட்டி அவர்கள் தவ்பா சொல்லி அவர்களோடு அனைவரும் தவ்பா சொல்லி, கலிமா; சலவாத்துடன் மஜ்லிஸ் கலைந்தது.
இன்றைய புகாரி ஷரிப்:
ReplyDeleteபெருமானார்(ஸல்) தனக்கு தொலை தந்தவர்கள், தன் உடல்லிருந்து இரத்தம் வரக் காரனமானவர்களை எல்லாம் சபிக்கவில்லை. தொழுகைக்கு இடையுறு செய்தவர்களைத் தான் சபித்தார்கள்.
கஃபத்துல்லாவில் தொழுது கொண்ருக்கும் பொழுது வான் காபிர்கள் ஒட்டக குடலை பெருமானார்(ஸல்) அண்ணவர்கள் கழுத்தில் போட்டுவிட்டு போய்விட்டார்கள். தலையை தூக்கமுடியவில்லை அதை கேள்வியுற்ற (சிறுமி) பாத்திமா நாயகம்(ரலி) அழுதுகொண்டே ஓடிவந்து அக்குடலை அகற்றினார்கள். பெருமானார் (ஸல்) தொழுகைக்கு இடைஞ்சல் செய்தவர்களை சபித்தார்கள். அந்த காபிர்களெல்லாம் பதுர் போரில் அழிந்துவிட்டார்கள்.
பதுர் போரில் அழிக்கப்பட்ட காபிர்களை ஒன்று குமித்து அவைகளுடன் பெருமானார்(ஸல்) பேசினார்கள். உடனே சகபா பெருமக்கள், 'இறந்துபோன அவைகளிடம் பேசுகிறீர்களே' என்று கேட்க, பெருமானார் (ஸல்) அவர்கள் 'நன்கு கேடப்பார்கள் ஆனால் அவர்களால் பதிலுரைக்கமுடியாது', என்றார்கள்.
பயானில், நம் முன்னோர்கள் கபுரின் பக்கம் செல்லும்போது ஒரு சலாம் கூட சொலவில்லை என்று கபுறாளிகள் வருத்தப்படுவர்கலாம் என்று ஆலிம் அவர்கள் நினைவூட்டினார்கள்.
பெண் குழைந்தைகளுக்கு உடல் தெரியுமாறு அறிந்தோ அறியாமலோ ஆடை அணிவித்துவிடுகின்றனர். குழந்தை இப்படித்தான் தனது ஆடைஎன்று நினைத்து எடுத்துக்கொள்கிறது. எனவே உடல் மறைக்கும் ஆடைகளை இளம் வயதிலிருந்தே அணிவிக்கவேண்டும். போன்ற வழிகாட்டலுக்கு பின் துவா-சலவாத்துடன் மஜ்லிஸ் கலைந்தது.