.

Pages

Friday, October 4, 2013

அதிரையில் ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் திருட்டு !

அதிரை ஈசிஆர் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜெஹபர்தீன் [ வயது 47 ] இவர் 'தாசீம் ரைஸ்' என்ற மில்லை தனது பூர்விக தொழிலாக நடத்தி வருகின்றார்.

இன்று [ 04-10-2013 ] அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தொழுகைக்காக எழுந்து பார்க்கும் போது வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புற கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையிலும், பெட்ரூமில் இருந்த ஸ்டீல் பீரோல் கொல்லைபுறத்தில் வைத்து உடைத்து அதில் உள்ள 27 சவரன் ஆபரணத்தங்க நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் ஆகியோரின் தலைமையில் அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டன.

விசாரணையில் திருடர்கள் ரைஸ் மில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் திருட முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. திருட்டு போன பகுதியின் அருகே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நகை கடை ஒன்றில் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

14 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.