அதைத்தொடர்ந்து நேற்று இரவு ராஜஸ்தானில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட ஆறு ஒட்டங்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக அதிரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காற்றோட்டமான பகுதியில் ஒட்டகங்களை மேயவிட்டு அதற்கு தேவையான தீனிகளும் கொடுத்து வருகின்றனர். நல்ல திடகாத்திரமாக காணப்படும் ஒவ்வொரு ஒட்டங்களும் சராசரியாக 300 முதல் 350 கிலோ வரை எடையைக் கொண்டுள்ளன.
தகவலறிந்த ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து த.மு.மு.க நகர நிர்வாகியிடம் பேசிய வகையில்...
'வழக்கம் போல் இந் தவருடமும் கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அதிரை கிளையின் சார்பாக திட்டமிட்டு இதற்காக நல்ல திடகாத்திரமான ஒட்டங்கள், மாடுகள் தகுதியுள்ள நபர் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டகத்தின் ஒரு பங்கின் விலை ரூபாய் 9000/- எனவும், மாட்டின் ஒரு பங்கின் விலை ரூபாய் 1100/- எனவும் நிர்ணயம் செய்து பங்குகள் பொதுமக்களிடம் பெறப்பட்டு வருகின்றன. இதில் பெறப்படும் தொகைகள் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படும்' என்றார்.
மேலும் எதிர்வரும் 13/10/2013 அன்று முதல் ஒட்டக கறி கிலோ 450/-க்கு விற்பனை செய்யவும் உத்தேசித்துள்ளனர்.
குர்பானி வசதிபடைத்தவர்களுக்கு ஒரு சுன்னத்து வசதி இல்லாதவர்களுக்கு கொடுத்து இருவரும் புனித ஹஜ்ஜி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டடுவோம்.
ReplyDeleteஇல்லாதவர்களுக்கு கொடுத்து இருவரும் புனித ஹஜ்ஜி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டடுவோம்
ReplyDelete