.

Pages

Tuesday, October 8, 2013

குர்பானிக்காக ஒட்டகங்கள் அதிரைக்கு வருகை ! பொதுமக்கள் மகிழ்ச்சி !

எதிர் வரும் ஹஜ்ஜுப்  பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அதிரை கிளை சார்பாக வழக்கம் போல் இந்தவருடமும் கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அதற்கான அறிவிப்பு நகர கிளையின் சார்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு ராஜஸ்தானில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட ஆறு ஒட்டங்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக அதிரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காற்றோட்டமான பகுதியில் ஒட்டகங்களை மேயவிட்டு அதற்கு தேவையான தீனிகளும் கொடுத்து வருகின்றனர். நல்ல திடகாத்திரமாக காணப்படும் ஒவ்வொரு ஒட்டங்களும் சராசரியாக 300 முதல் 350 கிலோ வரை எடையைக் கொண்டுள்ளன.

தகவலறிந்த ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து த.மு.மு.க நகர நிர்வாகியிடம் பேசிய வகையில்...
'வழக்கம் போல் இந் தவருடமும் கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அதிரை கிளையின் சார்பாக திட்டமிட்டு இதற்காக நல்ல திடகாத்திரமான ஒட்டங்கள், மாடுகள் தகுதியுள்ள நபர் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டகத்தின் ஒரு பங்கின் விலை ரூபாய் 9000/- எனவும், மாட்டின் ஒரு பங்கின் விலை ரூபாய் 1100/- எனவும் நிர்ணயம் செய்து பங்குகள் பொதுமக்களிடம் பெறப்பட்டு வருகின்றன. இதில் பெறப்படும் தொகைகள் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படும்' என்றார்.

மேலும் எதிர்வரும் 13/10/2013 அன்று முதல் ஒட்டக கறி கிலோ 450/-க்கு விற்பனை செய்யவும் உத்தேசித்துள்ளனர்.







2 comments:

  1. குர்பானி வசதிபடைத்தவர்களுக்கு ஒரு சுன்னத்து வசதி இல்லாதவர்களுக்கு கொடுத்து இருவரும் புனித ஹஜ்ஜி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டடுவோம்.

    ReplyDelete
  2. இல்லாதவர்களுக்கு கொடுத்து இருவரும் புனித ஹஜ்ஜி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டடுவோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.