.

Pages

Thursday, October 17, 2013

அதிரையில் சமூக நல்லிணக்க விழா ! பங்கேற்க அழைப்பு !

அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் வருகின்ற 20.10.2013 அன்று காலை 10 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் மாபெரும் பெருநாள் சந்திப்பு நடைபெற உள்ளது.

இதில் நமதூருக்கு அருகில் உள்ள நமது தொப்புள்கொடி உறவுகளான இந்து , கிருத்துவ மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்ற சென்னையிலிருந்து மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் சென்னை புது கல்லூரி பேராசிரியர் ஃபரித்அஸ்லம்  M.Sc,MPhil ,B.Ed உள்ளிட்ட பேச்சாளர்கள் பேச உள்ளார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக திருமிகு M செங்கமலச் செல்வன்(சிறப்பு நீதிபதி வன வழக்குகள் நீதிமன்றம் நாகர்கோயில்) மற்றும் திருமிகு T பன்னீர் செல்வம் (குற்றவியல் நீதிபதி -மன்னார்குடி )ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .

இந்நிகழ்வுக்கு தலைமையாக ஜனாப் இப்ராஹிம் அன்சாரி அவர்களும் , வரவேற்ப்புரை ஜனாப் ஜமீல் முகமது சாலிஹ் அவர்களும் முன்னிலை வக்கீல் ஜனாப்  முனாஃப் BA,BL (நோட்டரி பப்ளிக் & பிரமாண ஆணையர் ) அவர்களும் நன்றியுரை ஜனாப் முகமது இதிரீஸ் M.A MPhil, PGDCA (தலைவர் &விரிவுரையாளர் அரபி துறை கா, மு கல்லூரி )அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .

எனவே இந்த சமூக நல்லிணக்க விழாவில் தாங்களும் கலந்து கொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான மாற்று மத அன்பர்களையும் அழைத்துவர கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு: கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி.
அதிராம்பட்டினம் 
adiraieidmilan.blogspot.com

6 comments:

  1. சமய நல்லிணக்கம் தொடரட்டும்; மனித நேயம் படரட்டும்!

    ReplyDelete
  2. Thopul kode pravu anru sollum thagkal muthalel eslameyar kalukkul Ulla manznelaikku marunthu kodugkal summa bayala thoppul kode uravu anru sollaveandam. Sakothara samuthaya ottumayaiveda namakkulla pala perevai onrupaduththavum summa kuude...kudee sappeduvathai veda arevulla kareyam pannavum

    ReplyDelete
  3. நல்ல முயற்சி சின்ன திருத்தம் கலந்துக்கொள்ளும் அனைவருக்கு விருந்து என்பதற்கு பதில் மாற்றுமத நன்பர்களுக்கு மட்டும் விருந்து ஏற்பாடு செய்திருக்கலாம்
    நன்பர்கள் சேர்ந்து சப்பிடுவதை வீண் விரயம் என்று விமர்ச்சனம் செய்து விட்டு பணம் தருகிறார்கள் என்பதற்காக இந்த வீண் விரயம் செய்யலாமா?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.