.

Pages

Saturday, October 5, 2013

அதிரையில் சீரழிந்து கிடக்கும் பொதுசுகாதாரத்தை சரிசெய்ய வலியுறுத்தி நகர இளைஞர் காங்கிரசிஸ் செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் !

இளைஞர் காங்கிரஸ் கட்சி நகர கிளை சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் S. தர்மராஜ், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் M.M.S. அப்துல் கரீம், பட்டுக்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் A.K. மூர்த்தி ஆகியோர் தலைமையிலும், பட்டுக்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன் அவர்களின் முன்னிலையிலும் இனிதே துவங்கியது.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அதிரையில் சீரழிந்து கிடக்கும் பொதுசுகாதாரத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலகர்களை வலியுறுத்துவது.

2. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர சேவை வசதி செய்து தருவது தொடர்பாக அரசைக்கேட்டுக்கொள்வது.

3. பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்திலிருந்து – மன்னார் குடிக்கும் மன்னார்குடி வழியாக கும்பகோணம் – திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தரக்கோருதல் தொடர்பாக போக்குவரத்துதுறையை கேட்டுக்கொள்வது.

4. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலையைப் புதுபித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்வது.

5. எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமையின் கீழ் ஓரணியில் சேரும் கட்சிகளுக்காக களப்பணி ஆற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக்கூட்டத்தில் கட்சியில் இணைந்த புதிய தொண்டர்களுக்கு அடையாள அட்டையும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கிளை நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் நகர கிளை சார்பாக வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்பட்டன.

இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





1 comment:

  1. இவை அனைத்தும் அதிரை மக்களின் எதிர்பார்ப்பு பட்டுக்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன் சமூகசேவை தொடரட்டும் நண்பனுக்கு மணமார்ந்த நன்றி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.