.

Pages

Saturday, June 27, 2015

காவல்துறையின் தாக்குதலில் மற்றுமொரு வாலிபர் பரிதாப பலி !

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 14-10-2014 அன்று விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட சையது முகம்மது என்ற இளைஞர் எஸ்.ஐ. காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். இந்நிலையில் மற்றுமொரு சம்பவமாக காவல்துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு வாலிபர், சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ஷமீல் அஹமது (26). இவரை ஒரு வழக்கு தொடர்பாக அப்போது பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் கடந்த இரு வாரங்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டதால் காயமடைந்த ஷமீல் அஹமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், முஸ்லிம்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் நகரக் காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை இரவு திரண்டனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வேலூரில் இருந்து சிறப்பு அதிரடிப் படை போலீஸார் ஆம்பூருக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவியது.
பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் அண்மையில் வாணியம்பாடி கலால் பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

1 comment:

  1. தமிழகத்தில் தொடர்ந்து விசாரணை என்ற அடிப்படையில் கைதிகளை கொலை செய்வது வாடிக்கையாகிவிட்டது, இவர்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது, கைதியை விசாரித்து முறையாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் அதை விடுத்து தாங்களே சட்டத்தை கையில் எடுத்தால் காவல் துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

    சி பி ஐ விசாரணைக்கு வழக்கை விசாரித்தாலும் ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜை கைது செய்ய குறைந்தது 15 வருடங்களாவது ஆகும் இந்தமாதிரி லட்சணம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் நடந்தது, இப்படி நடப்பதால் தான் தொடர்ந்து பல கொலைகள் காவல்நிலையத்தில் நடக்குது.

    இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மட்டும் களத்தில் காணப்படுகிறார்கள் மற்றவர்கள் என்னாச்சு?நாங்கள் சிறுபான்மை காவலர்கள் என்று ஓட்டு வாங்குபவர்கள் எங்கே?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.