.

Pages

Wednesday, June 10, 2015

மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அதிரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் பங்கேற்பு !

தஞ்சை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இரத்த வங்கி, உயிருக்கு போராடும் நபர்களுக்கு இரத்தம் வழங்குதல், இரத்த வகை கண்டறிதல், பேரிடர் மேலாண்மை திறன் குறித்த மேம்பாடு பயிற்சி முகாம் மற்றும் செயல் விளக்கம், இலவச பொதுநல மருத்துவ முகாம், அவசரகால முதலுதவி மற்றும் வரும் முன் காப்போம் பயிற்சி முகாம் குறிப்பாக முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும், அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் கிளையை அதிரையில் துவங்குவதற்கான தீவிர ஆலோசனையில் அதிரையை சேர்ந்த தன்னார்வலர்கள் இறங்கினர். தொடர்ந்து இதற்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளில் மரைக்கா இத்ரீஸ் தீவிரமாக ஈடுபட்டார். இவருடைய ஆர்வத்துக்கு தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா அவர்கள் பக்கபலமாக இருந்து வந்தார். இதையடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர் தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை துவங்கப்பட்டது. இதில் 8 பேர் நிர்வாக பொறுப்புக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் அதிரை ரெட் கிராஸ் சேர்மனாக மரைக்கா இத்ரீஸ், துணை சேர்மனாக இர்ஃபான் சேக், செயலாளராக நிஜாமுதீன், துணை செயலாளராக அபூதாஹிர், பொருளாளராக ஹாஜி எஸ் ஏ அப்துல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக சார்லஸ், ஆறுமுகச்சாமி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை அதிரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. சுப்பையன் அவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் ரெட் கிராஸ் சேவையை ஆர்வத்துடன் செயல்படுத்துவது குறித்தும், இரத்த தானம் முகாம்களை நடத்தி இரத்த கொடையாளர்களிடமிருந்து அதிக இரத்த யூனிட்களை பெறுவது தொடர்பாக பேசப்பட்டன.

மேலும் அதிரையில் இரத்த தானம் முகாம் நடத்துவதும் குறித்தும், அவசரகால முதலுதவி பயிற்சி முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அதிரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் சார்பில் அதிரையில் நடத்த இருக்கும் அவசரகால முதலுதவி பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. சுப்பையன் அவர்களை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதில் தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா, தஞ்சை ரெட் கிராஸ் சேர்மன் மருத்துவர் சின்னச்சாமி, தமிழ்நாடு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எட்வின், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் திருமதி ராதிகா மைக்கேல், செந்தில், தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் மருத்துவ அலுவலர் மருத்துவர் சந்திரா, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ், செயலாளர் நிஜாமுதீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, சமியுல்லாஹ் மற்றும் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, சமூக ஆர்வலர் கமால் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.