.

Pages

Thursday, June 25, 2015

அருவாளை தூக்கிய அதிரை கவுன்சிலர் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப். கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வகையில் பொதுநல சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.

இவரது வார்டு பகுதிகளில் ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் முட்புதர்களால் வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதியுற்று வந்தனர். நமது பகுதியை நாமே சுத்தப்படுத்தினால் என்ன ? என எண்ணிய கவுன்சிலர் அப்துல் லத்திப். தனது வீட்டில் இருந்த அருவாளை கையில் எடுத்துக்கொண்டு கூடவே பேரூராட்சி துப்புரவு ஊழியர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு முட்புதர்கள் மண்டிக்காணப்படும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார். இவரது முயற்சிக்கு பலனளிக்கும் விதத்தில் சில மணி நேரங்களில் அந்த பகுதி முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கிறது.

'எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர் ஆற்றி வரும் பொதுநலப் பணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர். இவரைப்போல் அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என கேட்டுக்கொண்டனர்.
 
 
 

சுத்தப்படுத்திய பிறகு காட்சியளிக்கும் பகுதி
 
 

2 comments:

  1. ஒவ்வொரு கௌன்சிலர்கலும் தங்கள் கடமைகள் செய்தால் தான் வார்டு தூய்மை அடைவதோடு சுகாதாரமாக இருக்கும், ஒரு சிலரோ தங்களுக்கு அடைமொழியாக பதவியை பயன்படுத்துபவர்களின் மத்தியில் இவரு ஒரு எடுத்துக் காட்டு. இவரின் எண்ணங்களின் செயல்பாடு தான் இது - பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.