.

Pages

Sunday, June 21, 2015

ஷார்ஜா பள்ளி ஆண்டு மலரில் இடம்பெற இருக்கும் அதிரை மாணவனின் படைப்பு !

அதிரையை சேர்ந்தவர் ஜெஹபர் சாதிக், 'அதிரை முஜீப்' என அனைவராலும் அழைக்கப்படுபவர். அமீரக ஷார்ஜாவில் உள்ள கட்டுமான நிறுவனமொன்றில் அலுவலராக பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.

இவரது மகன் முஹம்மது ஆஷிப். அங்குள்ள கல்ஃப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் பள்ளியில் 'என் அம்மா' என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்று அதற்கான பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளார். மேலும் 'தொலைக்காட்சி' பற்றி எழுதிய விழிப்புணர்வு கட்டுரையும் சிறந்த கட்டுரையாக தேர்வு செய்து இந்த ஆண்டின் பள்ளி ஆண்டு மலரில் இடம்பெற உள்ளது. சாதனை படைத்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள் - சக மாணவர்கள் - பெற்றோர்கள் - உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
 

9 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    சங்கை மிகு சஹர் ரமலான்.

    மாணவனுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து பல சாதனைகள் செய்துவர வாழ்த்துகின்றேன்.

    மாணவரின் பெயர் ஒவ்வொரு படிவத்திலும் தவறுதலாக இருக்கின்றது, பெற்றோர்கள் பள்ளியில் சென்று உடனடியாக திருத்திக் கொள்ளவும்.

    Certificate of honour = MOHAMMED ASIF

    Result of Tamil elocution competition = ASHIF

    ஆசிப் / ஆஷிப் / ஆஸிப்?

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
    Replies
    1. Certificate of honour = MOHAMMED ASIF இதுதான் சரி.

      Result of Tamil elocution competition = ASHIF இது பள்ளியின் நோட்டீஸ் ஒட்டிய தகவல். இதில் H தவறுதலாக இடம்பெற்றுள்ளது.

      Delete
  2. அதிரை நியூஸ் நிர்வாகத்திற்கு நன்றி. இந்த செய்தி வளரும் மாணவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஜஜாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  3. தொடர்ந்து சாதனை படைக்க தம்பி முஹம்மது ஆசிப்புக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கல்வியுடன், மாணவனின் மேலும் தனித்திறமைகள் வெளிக்கொணர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Mr. Mujeeb,
    Congratulation to your son and to you!
    He will be an asset to you, insha Allah.

    ReplyDelete
  6. கருத்திட்ட அனைவருக்கும், மேலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.