தராவீஹ் தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியில் அதிக சப்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகிப்பதை பல பள்ளிவாசல்கள் பின்பற்றி வருகின்றன. குர்ஆன் வசனத்தை பலரும் கேட்க வைப்பதற்காகத்தான் இரவுத் தொழுகையில், பள்ளிவாசலுக்கு வெளியில், ஒலிப்பெருக்கி உபயோகிப்பதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இது அருகில் உள்ள வீடுகளிலோ, அல்லது அதே பகுதியில் ஒலிப்பெருக்கி உபயோகிக்காத பிற பள்ளிகளிலோ தொழுபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளியில் உள்ள பலரால் குர்ஆன் வசனம் கவனிக்கப்படுவதில்லை என்றும் இதனால் குர்ஆன் வசனத்திற்கு கொடுக்கப்படும் கண்ணியம் குறைகிறது என்றும் மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும் வயோதிகர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள், வழக்கமாக அவரவர்கள் உறங்கும் நேரங்களில் உறங்கிவிடுவர். அவர்களுக்கும் ஒலிப்பெருக்கி சப்தம் பல வகைகளில் சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்களில் பள்ளிவாசல்களில் பாங்கு அழைப்பிற்கு மட்டுமே ஒலிப்பெருக்கி உபயோகிக்கப்பட்டது. ஆனால் அது நாளடைவில் மாறி சில ஊர்களின் பள்ளிவாசல்களில் அனைத்து தொழுகைகளுக்கும் ஒலிபெருக்கி உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர்.
இது ஒருபுறமிருக்க, சில பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரிடையே நிகழும் ஈகோ, போட்டி போன்றவையும், இதுபோன்ற மாற்றங்களுக்கு காரணமாகிவிட்டது. அது பணக்கார பள்ளி, இது ஏழை பள்ளி என்று பிரித்துப் பார்க்கும் தன்மையும் சிலரிடம் சீரியஸாகவே வந்துவிட்டது. இதுவும் இதுபோன்ற மாற்றங்களுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. ( அல்லாஹ் பிரித்தாளும் தன்மையை எங்கும் அனுமதித்ததில்லை )
அதேபோல நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையும் பள்ளிவாசல்களுக்கு வெளியில் ஒலிப்பெருக்கி உபயோகிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, இதுபோன்ற பல சிரமங்களை கருத்தில் கொண்டே பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு பள்ளிவாசல்களுக்கு வெளியில் ஒலிப்பெருக்கி உபயோகிப்பதற்கு இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது பள்ளிவாசல்களின் உள்ளுக்குள் ஒலிப்பெருக்கி உபயோகித்து தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும் ஆனால் ஒரே பகுதில் பல பள்ளிவாசல்கள் இருக்கும் பட்சத்தில் ஒலிப்பெருக்கி உபயோகிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதேபோல வெளியில் ஒலிப்பெருக்கி உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களில், பிறருக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சப்தத்தை அதிகரிக்கக் கூடாது என்றும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.
மொபைல் போன்களில் குர்ஆன் வசனத்தை ரிங் டோனாக வைத்திருப்பவர்கள், போன் அழைப்பு வந்ததும் குர்ஆன் வசனத்திற்கு பாதியிலேயே தடைபோட்டு போனுக்கு பதிலளிக்கும் நிலை வரும்போது குர்ஆன் வசனத்திற்கு கொடுக்கப்படும் கண்ணியம் மீறப்படுவதாகவும், இதனால் மொபைல் போன்களில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக உபயோகிக்க வேண்டாம் என்றும் மார்க்க அறிஞர்கள் பலர் வேண்டுகோள் விடுத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்னு ஹசன்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசங்கை மிகு சஹர் ரமலான்.
அருமையான தலையங்கம், அருமை என்று சொல்லுவதைவிட இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை கண்ணியத்துடன் கருத்தில் கொண்டு செயலில் காட்டினால் கண்ணியம் கலை தூக்கும்.
கண்ணியம் கலை தூக்கி மலர உதவ யாரும் உண்டோ?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
ReplyDeleteஅருமையான தலையங்கம், அருமை என்று சொல்லுவதைவிட இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை கண்ணியத்துடன் கருத்தில் கொண்டு செயலில் காட்டினால் கண்ணியம் கலை தூக்கும்.
This comment has been removed by the author.
ReplyDeleteKaappena
ReplyDeletenarasus kaapbe than
beas..beas
கால்ம் அறிந்து வந்துள்ள விழிப்புணரவுப் பதிவு
ReplyDeleteஇதுபோன்ற பதிவுகள் தேவையற்றது...
ReplyDeleteஇடத்துக்கு ஏற்றார் போல் உபயோக படுத்துவது நல்லது (மாற்று மதத்தில் உபயோகிக் கிறார்கள் என்று நாமும் உபயோகிக்க தேவையில்லை)
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் தாரூத் தவுஹீத் உரவுகளுக்கு - அஸ்ஸலாமு அலைக்கும் தாரூத் தவுஹீத் உரவுகளுக்கு எங்கள் கேள்விகள். கடந்த 2 ஆண்டுகலாக தாரூத் தவுஹீதின் பயான் நடுத் தெருவில் நடந்தது புகல் அனைத்தும் இறைவனுக்கே. தாரூத் தவுஹீதின் பயான் மூலம் சில நடுத் தெரு மக்கள் பயனும் அடைந்து இறுப்பார்கள் அதை நடத்திய உங்களுக்கு இறைவன் நர்கூலிவழங்குவான் இன்ஷா அல்லாஹ் உங்களின் இந்த மகத்தானபனியை (1) ஏன் மற்ற தெருவிற்கும் கொண்டு செல்லக்கூடாது?? (2) மட்ற தெருக்களிள் கொண்டு செல்லக்கூடாது என்று என்னுகிறீர்களா?? (3)அல்லது மட்ற தெருக்களிள் உங்களின் பயானை கோட்கமாட்டார்கள் என்று என்னுகிறீர்களா??? (4) மட்ற தெருக்களிள் உங்க பயானுக்கு அனுமதி இல்லையா?? உங்கலேடு துனை நிர்ப்பவரின் மனைவி வாரத்திர்கு ஒரு முறை பிலால் நகரில் உள்ள ஒரு இடத்தில் பயான் நடத்தினார்கலே அந்த இடத்தில் நீங்கள் உங்களின் இறவு பயானை வைத்தாள் சென்ற வறுடம் நடுத்தெருவில் மக்கள் பயன் அடைந்தது பேல் பிலால் நகர் மக்களும் பயன் அடைவார்கலே??? ஏன் நடுத்தெருவுக்கு மட்டும் அப்படி ஒரு முக்கியத்துவம்??
ReplyDelete