இந்நிலையில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மெயின் ரோட்டிலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினரை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை கடைத்தெரு மார்க்கெட் சாலையில் பட்டுக்கோட்டை பிர்க்கா சர்வேயர் மூலம் சாலையின் இருபுறமும் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தந்த பகுதிகள் ஆக்கிரமனம் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் குறியீடு போடப்பட்டுள்ளன. இதையடுத்து இன்னும் சில தினங்களில் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் காவல்துறையின் உதவியோடு முற்றிலும் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இன்றைய நில அளவீடு பணியின் போது கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த திடீர் நில அளவீட்டால் இந்த பகுதியில் கூட்டம் கூடியது. சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Good job & I have appriceated....
ReplyDeleteGood job & I have appriceated....
ReplyDeleteGOOD WORK , quickly do it.
ReplyDeleteShould not bothering the merchandisers in the month of ramadan.
ReplyDeleteArumaiyana pathevu
ReplyDeleteஅதிரை சேர்மன் ....
ReplyDeleteசேவை பாராட்ட தக்கவை .
மீண்டும் அவர் சேவை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்