.

Pages

Tuesday, June 23, 2015

அதிரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை !

அதிரை மெயின் ரோட்டிலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை - கடைத்தெரு சாலை வரையிலான பகுதிகள் வர்த்தக பகுதியாக கருதப்படுவதால் எந்நேரமும் பரப்பரப்பான பகுதியாக காணப்படும். இதில் இருபுறமும் ஏராளமான வர்த்தக கடைகள் உள்ளன. இதனால் வாகன நெருக்கடி அதிகமாக காணப்படும். அதேபோல் கடைத்தெரு மார்க்கெட் சாலையில் தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான கடைகள் உணவங்கள், பலசரக்கு கடைகள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் இரு புறமும் நிறுத்தி விடுவதால் இந்த பகுதியில் வாகன நெருக்கடி அடிக்கடி நிகழும்.

இந்நிலையில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மெயின் ரோட்டிலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினரை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை கடைத்தெரு மார்க்கெட் சாலையில் பட்டுக்கோட்டை பிர்க்கா சர்வேயர் மூலம் சாலையின் இருபுறமும் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தந்த பகுதிகள் ஆக்கிரமனம் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் குறியீடு போடப்பட்டுள்ளன. இதையடுத்து இன்னும் சில தினங்களில் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் காவல்துறையின் உதவியோடு முற்றிலும் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இன்றைய நில அளவீடு பணியின் போது கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த திடீர் நில அளவீட்டால் இந்த பகுதியில் கூட்டம் கூடியது. சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 

6 comments:

  1. Should not bothering the merchandisers in the month of ramadan.

    ReplyDelete
  2. அதிரை சேர்மன் ....
    சேவை பாராட்ட தக்கவை .
    மீண்டும் அவர் சேவை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.