.

Pages

Thursday, June 25, 2015

விநியோகிக்கும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும் பிலால் நகர் நோன்பு கஞ்சி !

பிலால் நகர் – இப்பகுதியின் வடக்கே செடியன் குளமும், தெற்கே சேது பெருவழிச்சாலையும், மேற்கே பிரித்து போடப்பட்ட குறுகிய ரயில் [ மீட்டர் கேஜ் ] பாதையும், கிழக்கே காதிர் முகைதீன் கல்லூரியும் அமைந்துள்ளன.

இப்பகுதியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், மும்முனை மின்சார வசதி, பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம், போதுமான குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவற்றில் பின்தங்கி காணப்படுவது ஒரு பெருங்குறையாக இருந்து வந்தாலும், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு பெருத்த லாபத்தை அள்ளித்தந்த பகுதி என்ற சிறப்பைப் பெறுகிறது.

இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நமதூரைச் சேர்ந்த கண்ணியத்திற்குரிய சகோதரர்களின் பெரும் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட பிலால் (ரலி) பள்ளியால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்த பள்ளியால் தனி மஹல்லா என்ற அந்தஸ்தையும் இந்த பகுதி பெற்றுள்ளது.

சரி விசயத்திற்கு வருவோம்...
புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமாகிய ரமலானில் நமதூரைச் சார்ந்த அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே மிகப்பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். இதற்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது பிலால் ( ரலி ) பள்ளியின் நோன்பு கஞ்சி.  புனிதமிகு ரமலான் மாதத்தில் இந்த பள்ளியில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி நமதூரில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும். இந்த பகுதியினர் மட்டுமல்ல குறிப்பாக இப்பகுதியை சுற்றி இருக்கக்கூடிய ஏராளமானோர் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 45 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியானது விநியோகிக்கும் சில நிமிடங்களில் தீர்ந்து விடுகின்றன.
 
 
 
 

1 comment:

  1. நான் வாரம் ஒரு முறை வியாபார ரீதியாக கூத்தநல்லூர் செல்வது வழக்கம். ரமலான் தொடங்கி இருமுறை கூத்தநல்லூர் சென்றுவந்தேன். பள்ளி நிறுவாகம் நோன்பு திறக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தரவில்லை. கடைசியில் நானும் எனது நண்பரும் 20 ருபாய் கொடுத்து கடையில் தண்ணீர் வாங்கி வந்து நோன்பு திறந்தோம். ஏன் இந்த அவலநிலை?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.