தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை ஆகிய பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க கடந்த [ 09-04-2012 ] அன்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 & 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிட்டு இதை செயல்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. இந்த பணி நிறைவேற அதிரை பேரூராட்சி சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து இந்தப் பணி தொடர்பாக கடந்த 08-04-2013 அன்று திருச்சியிலிருந்து வருகை தந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் அதிரையில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் அதிரையில் துவங்கியது. பைப் குழாய்கள் லாரிகள் மூலம் அதிரைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் ஜேசிபி வாகனம் மற்றும் ஹிட்டாச்சி வாகனங்கள் மூலம் சிஎம்பி லேன் பகுதியிலிருந்து பள்ளம் தோண்டப்பட்டு அதில் குழாய்களை உடனுக்குடன் புதைக்கும் பணி நடைபெற்றது. மேலும் மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி வரை பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள் நேற்று காலை மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்தப் பணி தொடர்பாக கடந்த 08-04-2013 அன்று திருச்சியிலிருந்து வருகை தந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் அதிரையில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் அதிரையில் துவங்கியது. பைப் குழாய்கள் லாரிகள் மூலம் அதிரைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் ஜேசிபி வாகனம் மற்றும் ஹிட்டாச்சி வாகனங்கள் மூலம் சிஎம்பி லேன் பகுதியிலிருந்து பள்ளம் தோண்டப்பட்டு அதில் குழாய்களை உடனுக்குடன் புதைக்கும் பணி நடைபெற்றது. மேலும் மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி வரை பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள் நேற்று காலை மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.