.

Pages

Wednesday, September 2, 2015

நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹூதா' புதிய பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு கமிட்டியினர் நியமனம் !

நெசவுத்தெரு மஹல்லாவில் புதிதாக பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாக அப்பகுதியினரிடையே இருந்து வந்தது. இதற்கான முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அவ்வபோது ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நெசவுத்தெரு ஜமாத்தார்கள் கடந்த [ 07-08-2015 ] அன்று மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் மேற்கு பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சும் இடத்தில் ) புதிதாக பள்ளிவாசல் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நெசவுத்தெரு மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்கூட்டம் மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் முஹம்மது மொய்தீன் தலைமை வகித்தார். சங்கத்தின் துணை தலைவர் என். முஹம்மது ஜபருல்லா, செயலாளர்கள் நூர் முஹம்மது, என் அபூ தாஹிர், பொருளாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் வெளிநாடுவாழ் மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமீரகத்திலிருந்து தாயகம் வந்துள்ள அதிரை என். அப்துல் ஹாதி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட மஹல்லாவாசிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டன. கூட்ட முடிவில் புதிதாக கட்டப்பட இருக்கும் பள்ளிவாசலுக்கு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' என்ற பெயர் சூட்டுவது முடிவு செய்யப்பட்டது.

மேலும் பள்ளி கட்டுமான கமிட்டியினர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அமீராக முஹம்மது முகைதீன், ஜெஹபர் அலி ஆகியோரும், பொருளாராக நைனார் முஹம்மது, முஹம்மது சேக்தாவூது, சேக் நசுருதீன் ஆகியோரும், கட்டுமான குழுவினர்களாக ஹலிமுதீன், அபூதாகிர், தமீம் அன்சாரி, சேக் அலாவுதீன் ஆகியோரும், மார்க்க ஆலோசகர்களாக மவ்லவி இத்ரீஸ், மவ்லவி அப்துல் காதர் ஆகியோருடன் 14 பேர்கள் கொண்ட செயற்குழு கமிட்டியினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

4 comments:

  1. இன்ஷா அல்லாஹ்
    முகல்லா வாசிகள் தவிர ஊர் பிரமுகர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி இந்த காரியம் வெற்றியடைய துஆ செய்யவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.