அதிரை அடுத்துள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு ஏரிக்கரை சாலையில் வசிப்பவர் நல்லத்தம்பி. இவரது இரண்டாவது மகள் ரம்யா (20). கடந்த வருடம் முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இவரது இடுப்பு பகுதியில் கட்டி உருவானது. மருத்துவரிடம் கொண்டு சென்று இரண்டு முறை அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 5 கிலோவிற்கு மேல் எடையில் காணப்படும் கட்டியால் மாணவியின் உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது.
மாணவியின் கால், கைகள் மற்றும் உடலும் மெலிந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மானவி ரம்யா தனது இயற்கை உபாதைகளை தனியாக சென்று கழிக்கக்கூட முடியாத அளவில் சிரமபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக அதிரை நியூஸ் பங்களிப்பாளரும், பிரபல பத்திரிக்கை நிருபருமாகிய முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை அவர்களுக்கு தம்பிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' வல்லரசு மூலம் தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இருவரும் நேரடியாக மாணவியின் இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பரிதாப நிலையை அறிந்து இவர்கள் ஊடகம் மூலம் செய்தியை கொண்டுசெல்ல முடிவு செய்தனர். இதையடுத்து மாணவியின் உடல் நிலை குறித்து பத்திரிகையிலும், அதிரை நியூஸிலும் செய்தி வெளியிடப்பட்டது.
அதிரை நியூஸ் செய்தியை பார்வையிட்ட பிரபல தொழில் அதிபரும், அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ நிதிஉதவிகளை தொடர்ந்து செய்து வருபவருமான பழஞ்சூர் கே. செல்வம் அவர்கள் உயிருக்கு போராடும் மாணவிக்கு உதவ முன்வந்தார். இதையடுத்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் அவர்களை தொடர்பு கொண்டு தமது சார்பாக மருத்துவ நிதி உதவியை மாணவியிடம் வழங்க அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், இந்த செய்தியை அனைவரின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற நிருபர் மொய்தீன் பிச்சை, இந்த பகுதியின் சமூக ஆர்வலர் வல்லரசு மற்றும் அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் ஆகியோர் மாணவியின் இல்லம் சென்று மாணவியின் பரிதாப நிலையை கண்டு வருந்தினர். மாணவியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும் பெற்றோருக்கு ஆறுதல் கூறி மருத்துவ உதவித்தொகை ₹10,000/-த்தை வழங்கினார்கள். உதவியை பெற்றுக்கொண்ட மாணவியின் குடும்பத்தினர் உதவியளித்த அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் பழஞ்சூர் கே. செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவரது இடுப்பு பகுதியில் கட்டி உருவானது. மருத்துவரிடம் கொண்டு சென்று இரண்டு முறை அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 5 கிலோவிற்கு மேல் எடையில் காணப்படும் கட்டியால் மாணவியின் உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது.
மாணவியின் கால், கைகள் மற்றும் உடலும் மெலிந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மானவி ரம்யா தனது இயற்கை உபாதைகளை தனியாக சென்று கழிக்கக்கூட முடியாத அளவில் சிரமபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக அதிரை நியூஸ் பங்களிப்பாளரும், பிரபல பத்திரிக்கை நிருபருமாகிய முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை அவர்களுக்கு தம்பிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' வல்லரசு மூலம் தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இருவரும் நேரடியாக மாணவியின் இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பரிதாப நிலையை அறிந்து இவர்கள் ஊடகம் மூலம் செய்தியை கொண்டுசெல்ல முடிவு செய்தனர். இதையடுத்து மாணவியின் உடல் நிலை குறித்து பத்திரிகையிலும், அதிரை நியூஸிலும் செய்தி வெளியிடப்பட்டது.
அதிரை நியூஸ் செய்தியை பார்வையிட்ட பிரபல தொழில் அதிபரும், அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ நிதிஉதவிகளை தொடர்ந்து செய்து வருபவருமான பழஞ்சூர் கே. செல்வம் அவர்கள் உயிருக்கு போராடும் மாணவிக்கு உதவ முன்வந்தார். இதையடுத்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் அவர்களை தொடர்பு கொண்டு தமது சார்பாக மருத்துவ நிதி உதவியை மாணவியிடம் வழங்க அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், இந்த செய்தியை அனைவரின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற நிருபர் மொய்தீன் பிச்சை, இந்த பகுதியின் சமூக ஆர்வலர் வல்லரசு மற்றும் அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் ஆகியோர் மாணவியின் இல்லம் சென்று மாணவியின் பரிதாப நிலையை கண்டு வருந்தினர். மாணவியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும் பெற்றோருக்கு ஆறுதல் கூறி மருத்துவ உதவித்தொகை ₹10,000/-த்தை வழங்கினார்கள். உதவியை பெற்றுக்கொண்ட மாணவியின் குடும்பத்தினர் உதவியளித்த அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் பழஞ்சூர் கே. செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.