.

Pages

Tuesday, September 29, 2015

வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் வருவாய் துறையின் சார்பில் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
     
பேரணியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, 01.01.2016 தேதியினை (31.12.1997 அன்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்களும்) தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சேர்க்கும் பணி 15.09.2015 அன்று தொடங்கி 14.10.2015 வரை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
   
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் பெயர்சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் நீக்கம் தொடர்பான படிவங்களை (6, 6ஏ, 7, 8 மற்றும் 8ஏ) பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கொடுத்து பயன் பெறலாம்.
   
அனைத்து படிவங்களும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் போதிய அளவு இருப்பில் உள்ளதால் படிவங்களை பெற்று பெயர் சேர்த்தல் மற்றும் உரிய திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.  படிவங்களை நிரப்பிட  பொது மக்களுக்கு வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உதவி செய்வார்கள்.

இருப்பிடம் மற்றும் வயதுக்கான ஆதாரங்களுடன் விண்ணப்பித்து வாக்காளராக கேட்டுக் கொள்கிறேன்.  வாக்காளாராவது நமது உரிமை. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, வாக்காளராகி பொது மக்கள் உரிமையை நிலை நாட்டவும்,  வாக்காளராகி இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்யவும், உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் தகுதியுள்ள அனைவரும் வாக்களராகபதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.   இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாhர்.
     
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபம் சென்றடைந்தது.   பேரணியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், வட்டாட்சியர் திரு.சுரேஷ், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.