அதிரையில் நாளை [ 20-09-2015 ] விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.
விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசாரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகள் காவல்துறையினரால் அகற்றப்படும். கடந்த வருடங்களில் போலீசாரால் அனுமதிக்கப்பட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு மட்டும் இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதியில்லை.
இந்நிலையில் முத்தம்மாள் தெருவின் பிரதான சாலையில் காவல்துறை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்ற வலியுறுத்தி பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரை காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் பிஎஃப்ஐ அமைப்பினர் மற்றும் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம். முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் காவல்நிலையம் சென்று அளித்தனர்.
விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசாரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகள் காவல்துறையினரால் அகற்றப்படும். கடந்த வருடங்களில் போலீசாரால் அனுமதிக்கப்பட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு மட்டும் இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதியில்லை.
இந்நிலையில் முத்தம்மாள் தெருவின் பிரதான சாலையில் காவல்துறை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்ற வலியுறுத்தி பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரை காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் பிஎஃப்ஐ அமைப்பினர் மற்றும் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம். முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் காவல்நிலையம் சென்று அளித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.