.

Pages

Wednesday, September 30, 2015

பட்டா மாறுதல் குறைபாடு: மேல்முறையீடு செய்யலாம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டா மாறுதல் பெற்றவர்கள், குறைபாடுகள் தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என்று ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் செய்து, அதன் பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இனங்களில் திருத்தம், குறைபாடுகள் இருந்தால்  மனுதாரர்கள்  வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.  மேலும், வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், மனுதாரர்கள், மேல்முறையீட்டாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டா மாறுதல் தொடர்பாக, தஞ்சாவூர் கோட்டத்தில் 27 மனுக்களும், கும்பகோணம் கோட்டத்தில் 15 மனுக்களும், பட்டுக்கோட்டை கோட்டத்தில் 13 மனுக்களும் நிலுவையில் உள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலரிடம் 25 பட்டா மாறுதல் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களின் பட்டியல் முழு விவரங்களோடு  பி.டி.எப். முறையில், மாவட்ட  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்தவர்களின் பெயர், பட்டியலில் விடுபட்டிருந்தால் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரை நேரில் அணுகி விவரம் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.