.

Pages

Monday, September 21, 2015

முத்துப்பேட்டையில் 2வது நாளாக போலீஸ் அடையாள அணிவகுப்பு !

முத்துப்பேட்டையில் நாளை (22ம்தேதி) இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பில் பல்வேறு முன்ளனற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூர் எஸ்.பி. ஜெயசந்திரன் தலைமையில் போலீஸ் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. 2வது நாளாக நேற்று மாலை போலீஸ் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
செம்படவன் காடு ரயில்வே கேட்டிலிருந்து துவங்கிய போலீஸ் அணிவகுப்பிற்கு எஸ்.பி.ஜெயசந்திரன் தலைமை வகித்தார். ஏராளமான போலீசார் அணிவகுத்து சென்றனர்.

அணிவகுப்பு ஊர்வலம் பட்டுக்கோட்டை சாலை, பங்களாவாசல், கொய்யா முக்கம். நியூபஜார் வழியாக பழையபேருந்து நிலையம் சென்று திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆசாத்நகர் சென்றது. அங்கு கலெக்டர் மதிவாணன் போலீஸ் அணி வகுப்பை பார்வையிட்டு, பின்னர் எஸ்.பி. ஜெயசந்திரனிடம் தீவிர  ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்ட போலீஸ் அணிவகுப்பு அதே வழியாக வந்து மன்னார்குடி சாலையில் சென்று டி.எஸ்.பி அலுவலகம் சென்றடைந்தது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை,முத்துப்பேட்டை

1 comment:

  1. முத்துபேட்டை விநாயகர் ஊர்வலத்திலும் இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் ..???
    முத்துபேட்டை காவல்துறைக்கு அதிகம் கவனம் மற்றும் எச்சரிக்கை அவசியம் .

    பழனியில் இந்து முன்னனி அராஜகம் :-

    கடந்த 20.09.15 ஞாயிறு அன்று இந்து முன்னனி மற்றும் VHP சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது இதில் வண்டி எண் இல்லாத ஒரு ட்ராக்டர் வண்டியிருந்து இந்து முன்னனி கயவர்களால் கற்கள் பழனி சின்னப் பள்ளிவாசலை நோக்கி எரியப்பட்டதில் ஜமாதார்கள் 3பேர் காயமடைந்தனர்.

    ஊர்வலத்தில் 43 சிலைகள் அமைதியாக சென்றது பிறகு வந்த 44 வது வண்டியிலிருந்து சம்பவம் மாலை சுமார் 7:15 மணியளவில் நடந்தது. காவல் துறைகள் இருந்தும் இது போன்ற சம்பவங்கள் திராணியுடன் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்னும் வழக்குகள் பதியாமலும், நடவடிக்கைகள் எடுக்காமலும் கண்துடைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றது பழனி காவல் துறை.

    இன்னும் இன்றும், நாளையும் என்ன நடக்குமோ என்று பழனியில் பதட்டம் நிலவுகிறது.

    - கண்டனத்துடன்
    கீரனூர் குரல்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.