.

Pages

Tuesday, September 29, 2015

அதிரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது !

கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி வழங்க வேண்டிய நீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கருகும் பயிரை காப்பாற்ற கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வலியுறுத்தியும் அதிரை பேரூர் இந்திய கம்யூனிஸ்ட், அனைத்து விவசாய சங்கங்கள், விவசாய தொழிளாலர் சங்கங்கள் சார்பில் அதிரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிரை பேரூர் செயலாளர் என். காளிதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் கே. சோமசுந்திரம், வி ராமலிங்கம், எஸ்.பன்னீர் செல்வம், கே. பிச்சை முத்து, எம்.எல்.ஏ ஹசன், ஹாஜா முகைதீன். ஹலீம், விவசாய சங்க பொறுப்பாளர்கள் பன்னீர், பசீர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.