.

Pages

Friday, September 25, 2015

ஹாஜிகள் நலமுடன் இருக்கின்றனர்: அல் நூர் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் தகவல் !

புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 149 ஹாஜிகள் பிரபல அல் நூர் ஹஜ் சர்வீஸ் மூலம் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், ஹஜ் புனித யாத்திரைக்கு வந்தவர்களின் கூட்டம் அதிகமானதால், திடீரென மெக்கா மசூதிக்கு வெளியே கடும் நெரிசல் ஏற்பட்டதில் 717 பேர் சிக்கி பலியாகி உள்ளதாகவும், 805க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

இதையடுத்து சவூதி மெக்காவில் புனித ஹஜ் கடமை நிறைவேற்றி வரும் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி ஹாஜிகளின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக உறவினர்கள் - நண்பர்கள் அலைபேசிகளின் வாயிலாக பயண ஏற்பாட்டாளர்களிடம் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.

இதுதொடர்பாக அதிரையின் பிரபல தொழில் அதிபரும், அல் நூர் ஹஜ் சர்வீஸ் நிறுவன உரிமையாளருமாகிய ஹாஜி முஹம்மது அலி நம்மிடம் தொலைபேசியில் கூறியதாவது...
'நமது அல் நூர் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் மூலம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 149 ஹாஜிகள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் இறைவனின் பேருதவியால் பாதுகாப்பாகவும், நலமுடன் இருக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் சவூதி மெக்காவில் முகாமிட்டுள்ள நானும், எனது குழுவினர்களும் உடனிருந்து செய்து வருகிறோம்.

இன்ஷா அல்லாஹ் அல் நூர் மற்றும் அல் தாஜ் ஆகிய நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொண்ட அனைத்து ஹாஜிகளும் புனித ஹஜ் கடமை நிறைவேற்றிய பிறகு எதிர்வரும் 02-10-2015 அன்று பாதுகாப்பாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் அனைத்து ஹாஜிகளும் நலமுடன் ஊர் திரும்பவும் - பயணம் பாதுகாப்பாக அமையவும் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.