.

Pages

Tuesday, September 29, 2015

பிலால் நகர் உயர் மின் அழுத்த கம்பிகளுக்கிடையே செல்லும் முட்புதர்கள் அகற்றும் பணி தீவிரம் !

அதிரையின் பெரும்பாலான இடங்களில் ஆபத்தான நிலைமையில் காணப்படும் மின்கம்பங்கள் மற்றும் பிலால் நகரின் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை மாற்று இடத்தில் அமைத்து கொடுக்கவும், பழுதடைந்த மின்கம்பிகள், மின்கம்பங்களை உடனடியாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து கடந்த [ 23-09-2015 ] அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் இதுதொடர்பாக நமது சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.

இதில் அதிரை வளர்ந்து வரும் பகுதி என்றும், இங்கு பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் சம்பந்தபட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு குறைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏரிபுறக்கரை ஊராட்சி மன்றத்தின் ஏற்பாட்டின் பேரில் பிலால் நகரின் குடியிருப்பு பகுதி வழியே செல்லும் உயர் மின்அழுத்த கம்பிகளுக்கிடைய மண்டிக்காணப்படும் முட்புதர்களை அதிரை மின்சார வாரிய பணியாளர்களின் மேற்பார்வையில் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின்கம்பிகளில் சிக்கியுள்ள தென்னை தோவைகளை அகற்றும் பணியும் நடைபெறுகிறது.

இந்த பணிகளை ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் தமுமுக துணை செயலாளர் கமாலுத்தீன் மற்றும் ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற பணியாளர்கள் உடனிருந்து பார்வையிட்டு வருகின்றனர். இதனால் பிலால் நகர் பகுதியில் இன்று காலை முதல் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.