அதிரையை சேர்ந்தவர் எம்.ஏ அப்துல் ஹாதி. இவரது மனைவி ஆலிமா ரபீஸ். பாரம்பரிய சித்த மருத்துவரான இவர் தனது இல்லத்தில் உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் சிறப்பு சித்த வைத்தியம் மேற்கொண்டு வந்தார். இவரிடம் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தனது சித்த மருத்துவமனையை மேலத்தெரு சானவயல் பகுதியில் புதிதாக துவங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை நகர்மன்ற பெருந்தலைவர் திரு. ஜவஹர் பாபு அவர்கள் சித்த மருத்துவனையை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இதை தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ். ஹெச் அஸ்லம், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், ஷிஃபா மருத்துவமனை நிர்வாகச் செயலர் ஷிப்ஹத்துல்லாஹ், அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா கே இத்ரீஸ் அஹமது ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக அருளகம் சித்த மருத்துவர் ஆலிமா ரபீஸ் அனைவரையும் வரவேற்றார். விழா முடிவில் அருளகம் சித்த மருத்துவமனையின் நிறுவனர் எம்.ஏ அப்துல் ஹாதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி சித்த மருத்துவமனையின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )















No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.