.

Pages

Sunday, September 20, 2015

அதிரையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் !

இன்று மாலை அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலைகள் ஊர்வலமாக சென்று ஏரிபுறக்கரை கடலில் கரைக்கப்பட்டது.

அதிரை இந்துமுன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் துவக்க விழா வண்டிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. விழா இந்து முன்னணி அதிரை நகர தலைவர் பிரபாகரன், துணை தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நகர பொதுச்செயலாளர் அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மாயக்கூத்தன் சிறப்புரை ஆற்றினார்.

இதையடுத்து ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வண்டிபேட்டையிலிருந்து புறப்பட்டு சேர்மன் வாடி, பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை வழியாக ஏரிபுறக்கரை சென்றது.

ஊர்வலத்தில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், 13 டிஎஸ்பிக்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 46 சப்இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் வஜ்ரா வாகனம், கண்ணீர் புகை வண்டி, தீயணைப்பு வாகனம், கேமிரா கண்காணிப்பு வாகனம் உள்ளிட்டவை பாதுகாப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டன.

ஊர்வலம் செல்லும் பாதைகளின் முக்கிய பகுதியின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் அமைதியாக ஊர்வலம் நடந்து முடிந்தது.
 
 
 
 



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.