.

Pages

Monday, September 28, 2015

அதிரை பைத்துல்மாலின் மனிதநேயப் பணி !

அதிரையில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர் கதிஜா பீவி ( வயது 65 ). மணமேல்குடியை சேர்ந்த இவர் அதிரையர்களுக்கு மிகவும் பரிச்சையமானவர். அதிரையில் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் மிகவும் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்பு அதிரை பைத்துல்மால் செய்து வந்த பல்வேறு உதவிகள் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவரது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அதிரை பைத்துல்மால் சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பென்சன் நிதி உதவி வழங்கப்பட்டு வந்ததும், மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது ஆம்புலன்ஸ் வசதி வழங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆதரவற்றோர் மீது அதிக அக்கறை காட்டும் அதிரை பைத்துல்மாலின் மனிதநேயப் பணியை பலரும் பாராட்டுகின்றனர். இறந்த கதிஜா பீவி போல் பலருக்கு பல்வேறு மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.