டெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாடுகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்திரவுப்படியும், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர். ஆ.சுப்பிரமணி அவர்கள் வழிகாட்டுதல் படியும், பட்டுக்கோட்டை வட்டாரப்பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கட்டுப்பாட்டு முன்னேற்பாடுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பட்டுக்கோட்டை வட்டார பகுதிக்கு உட்பட்ட அதிரையில் கடந்த ஒரு வாரகாலமாக பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் தலைமையில், ராஜாமடம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீநாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர் எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் அடங்கிய அலுவலர்கள் மற்றும் தற்காலிக களப்பணியாளர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு, நடுத்தெரு மற்றும் ஏரிபுறக்கரை ஊராட்சி பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு முன்னேற்பாடுப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் வெளி நோயாளிகளில் காய்ச்சல் நோயாளிகள், அரசினர் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் காய்ச்சல் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு, அப்பகுதிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், தற்காலிக களப்பணியாளர்கள் சென்று அப்பகுதிகளில் வேறு எவரேனும் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று ஆய்வு செய்து வருகின்றனர். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. முதிர்வு கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடித்தல் பணி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரதுறை சார்பில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
பட்டுக்கோட்டை வட்டார பகுதிக்கு உட்பட்ட அதிரையில் கடந்த ஒரு வாரகாலமாக பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் தலைமையில், ராஜாமடம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீநாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர் எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் அடங்கிய அலுவலர்கள் மற்றும் தற்காலிக களப்பணியாளர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு, நடுத்தெரு மற்றும் ஏரிபுறக்கரை ஊராட்சி பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு முன்னேற்பாடுப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் வெளி நோயாளிகளில் காய்ச்சல் நோயாளிகள், அரசினர் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் காய்ச்சல் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு, அப்பகுதிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், தற்காலிக களப்பணியாளர்கள் சென்று அப்பகுதிகளில் வேறு எவரேனும் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று ஆய்வு செய்து வருகின்றனர். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. முதிர்வு கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடித்தல் பணி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரதுறை சார்பில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.