.

Pages

Thursday, October 1, 2015

அமீரக சாலை கோர விபத்தில் இந்திய தம்பதி பலி !

அமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி. கடந்த சனி அன்று அல் அய்ன் அருகே நடந்த சாலை விபத்தில் தமிழ்நாடு நாமக்கல் காமராஜர் நகரை சேர்ந்த பிரிவித்தி ராஜ்(வயது 31) மற்றும் அவரது மனைவி வினீஷா (இரண்டு மாத கர்ப்பிணி - வயது 21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் அவரது 10 மாத குழந்தை விபின் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் தற்பொழுது அபுதாபி அல் தாவ்ம் மருத்துவமனையில் ( Al Tawm hospital ) இல் சிகிச்சை பெற்று வருகிறான்.

ஹஜ் பெருநாள் பண்டிகை விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பொழுது இந்த கோர விபத்து நடந்துள்ளது. நண்பர்களுடன் பேருந்தின் கடைசி இருக்கையில் இவர்கள் தங்கள் 10 மாத குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது எதிர் பாரத விதமாக வேறொரு Lexus காருடன் நடந்த விபத்தில் தம்பதி இருவர் , மேலும் இவர்களுடன் பயணம் செய்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பிரிவித்தி ராஜ்(வயது 31) அமீரகத்தில் IT பிரிவில் பணி புரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவரது மனைவியை அமீரகதிற்கு அழைத்து வந்துள்ளார். பெற்றோர் இருவரையும் இழந்த 10 மாத குழந்தை விபின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றதுடன் தற்பொழுது அபுதாபி அல் தாவ்ம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.