.

Pages

Tuesday, October 27, 2015

கவிழ்ந்த கண்டெய்னரை மீட்டெடுக்கும் பணி தீவிரம் !

தூத்துக்குடியிலிருந்து ஈசிஆர் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ரக் வாகனத்தில் 28 CBM கொள்ளளவு கொண்ட கண்டெய்னரில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்றது. வாகனத்தை தூத்துக்குடி மாவட்டம் மாவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலகுருசாமி மகன் ராஜ்குமார் ( வயது 28 ) ஓட்டிவந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அதிரை ஈசிஆர் சாலை பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையின் வளைவில் நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ராஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்த வாகனத்தை மீட்டெடுக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.

மற்றொரு வாகனம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த ட்ரக் வாகனம் நேற்று தூக்கி நிறுத்தப்பட்டன. எனினும் கவிழ்ந்த கண்டெய்னரில் அதிக சுமை இருந்ததால் கண்டெய்னரை தூக்கி நிறுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை ஊழியர்கள் வரழைக்கப்பட்டு கண்டெய்னரில் இருந்த டைல்ஸ் முழுவதும் மற்றொரு வாகனத்தில் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. கவிழ்ந்த கண்டெய்னர் இன்றைக்குள் அப்புறப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.