.

Pages

Thursday, October 22, 2015

அதிரையில் தமுமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா: பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு !

அதிரையில் பசுமையை வலியுறுத்தி அதிரை நகர தமுமுக சார்பில் அதன் செயலளார் ஏ.ஆர் சாதிக் பாட்சா அவர்களின் தீவிர முயற்சியில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ,  மமக மாநில அமைப்பு செயலாளரும், ஆம்புர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

அதிரை பேருந்து நிலையம் - பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை - கடைத்தெரு - தக்வா பள்ளி - கீழத்தெரு - பெரிய ஜும்மா பள்ளி வரையில் உள்ள கிராம இணைப்பு சாலையில் மொத்தம் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, ஜே.கலந்தர், தமுமுக மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா மற்றும் அதிரை நகர தமுமுக - மமக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.