.

Pages

Friday, October 23, 2015

மறைந்த இந்திய ஹஜ் தன்னார்வலர் பெயரில் விருது - சவூதி இந்திய தூதரகம் அறிவிப்பு!

ஹஜ்ஜின்போது உயிரிழந்த ஹஜ் தன்னார்வலர் பெயரில் வரும் ஆண்டுகளில் விருதுகள் வழங்கப்படும் என்று சவூதி இந்திய தூதரக துணைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஹஜ்ஜின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்காணோர் படுகாயமடைந்தனர்.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தின்போது ஹாஜிகளுக்கு உதவி புரிந்துகொண்டிருந்த 'இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம்' தன்னார்வலர் நியாசுல் ஹக்(ஜார்கண்ட் மாநிலம்) நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ஜித்தா இந்திய தூதரகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய துணைத் தூதுவர் பி.எஸ்.முபாரக், "வரும் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றும் ஹஜ் தன்னார்வலர்களுக்கு மறைந்த நியாசுல் ஹக் பெயரில் விருதுகள் வழங்கப்படும்" என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டு மறைந்த நியாசுல் ஹக்கிற்கு இரங்கல் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.