தஞ்சாவூரில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள்
இளைஞர் எழுச்சி நாள் முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இளைஞர் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதை அடுத்து இன்று 15.10.2015 பல்லாயிரக்கணக்கோர் பங்கேற்க இளைஞர் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மறைந்த இந்தியாவின் ஏவுகனை நாயகன் என்றும், திருக்குறள் வழி நடந்தவர் என்றும் இளைஞர் எழுச்சி நாயகன் என்று போற்றப்படும் பன்முக தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ம் நாள் இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்கள்.
இன்று தஞ்சாவூரில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இளைஞர் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 6 முதல் 8 வயது வரை உள்ள மாணவர்கள் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், 9 முதல் 12 வயது வரை முதலிடம் பெறும் மாணவரும், மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
மேலும் அறிவியல் வல்லுநர்கள் கொண்டு மாணவ மாணவியர்களுக்கு அறிவியல் சம்பந்தமாக என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும், செயல்முறை விளக்கங்கள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் விண்வெளி கல்வி சார்பான புகைப்படக்கண்காட்சி, பிர்லா கோலரங்கத்தில் நடைபெறுகிறது. அதிலும் பங்கேற்று மாணவ மாணவியர்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் கடின உழைப்பாலும் ஒருமுக சிந்தனையாலும், விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசு தலைவராகவும் விளங்கினார். இந்தியா வல்லராசாக உருவெடுக்க மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை கனவு காணுங்கள் என தன்னம்பிக்கை வளரும் விதமாக எடுத்துக் கூறினார். வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டாமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி என வெற்றியின் இரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார்.
டாக்டர் அவர்கள் ஆசிரியராக இருப்பதையே மிகவும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும் தனது பேச்சாலும், கருத்துக்களாலும் கவர்ந்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் சிறந்து பங்காற்றிடவும், உந்து சக்தியாகவும் விளங்கினார். எனவே அவர் பிறந்த நாளை அக்டோபர் 15ம் நாளான இன்று பல்வேறு வழிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாணவ மாணவியர்கள் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் கனவை நினைவாக்கி இந்தியா வல்லரசாக உயர அனைவரும் பாடுபட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாற மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
பேரணி ரயில் நிலையத்தில் தொடங்கி காந்திஜி சாலை, கீழவீதி வழியாக அரண்மனை வளாகம் சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ரெ.திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.கேசவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.க.பாபு, ஆசிரியர், ஆசிரியைகள், 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
இளைஞர் எழுச்சி நாள் முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இளைஞர் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதை அடுத்து இன்று 15.10.2015 பல்லாயிரக்கணக்கோர் பங்கேற்க இளைஞர் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மறைந்த இந்தியாவின் ஏவுகனை நாயகன் என்றும், திருக்குறள் வழி நடந்தவர் என்றும் இளைஞர் எழுச்சி நாயகன் என்று போற்றப்படும் பன்முக தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ம் நாள் இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்கள்.
இன்று தஞ்சாவூரில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இளைஞர் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 6 முதல் 8 வயது வரை உள்ள மாணவர்கள் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், 9 முதல் 12 வயது வரை முதலிடம் பெறும் மாணவரும், மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
மேலும் அறிவியல் வல்லுநர்கள் கொண்டு மாணவ மாணவியர்களுக்கு அறிவியல் சம்பந்தமாக என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும், செயல்முறை விளக்கங்கள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் விண்வெளி கல்வி சார்பான புகைப்படக்கண்காட்சி, பிர்லா கோலரங்கத்தில் நடைபெறுகிறது. அதிலும் பங்கேற்று மாணவ மாணவியர்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் கடின உழைப்பாலும் ஒருமுக சிந்தனையாலும், விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசு தலைவராகவும் விளங்கினார். இந்தியா வல்லராசாக உருவெடுக்க மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை கனவு காணுங்கள் என தன்னம்பிக்கை வளரும் விதமாக எடுத்துக் கூறினார். வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டாமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி என வெற்றியின் இரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார்.
டாக்டர் அவர்கள் ஆசிரியராக இருப்பதையே மிகவும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும் தனது பேச்சாலும், கருத்துக்களாலும் கவர்ந்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் சிறந்து பங்காற்றிடவும், உந்து சக்தியாகவும் விளங்கினார். எனவே அவர் பிறந்த நாளை அக்டோபர் 15ம் நாளான இன்று பல்வேறு வழிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாணவ மாணவியர்கள் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் கனவை நினைவாக்கி இந்தியா வல்லரசாக உயர அனைவரும் பாடுபட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாற மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
பேரணி ரயில் நிலையத்தில் தொடங்கி காந்திஜி சாலை, கீழவீதி வழியாக அரண்மனை வளாகம் சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ரெ.திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.கேசவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.க.பாபு, ஆசிரியர், ஆசிரியைகள், 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.