.

Pages

Wednesday, October 28, 2015

பாதுகாப்பு இல்லாததா வாட்ஸ்அப் ?

வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும் அவை என்றாவது ஒருநாள் திருடப்பட்டு வெளியில் கசியவிடப்படும் என்று செக்கோஸ்லாவாகியா நாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம்  தெரிய வந்துள்ளது.

வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக் கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கணினிகள்  பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், ஒருவேளை ஹேக்கிங் செய்யப்பட்டால், வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் வெளியேறாமல் இருக்க ஆண்ட்ராய்ட் போன்களிலிருந்து வாட்ஸ்அப் சர்வர்களில் சேமிக்கப்படும்போது, ரகசிய மொழியாக மாற்றி பாதுகாக்க ஒரு பிரத்யேக டூலை இந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆகவே, இந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த சாதனத்துடன், முழு நெட்வொர்க் டிராபிக்கும் தேவை எனவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது பாதுகாப்பு இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இப்போதைக்கு வாட்ஸ்அப் குறிப்புகள் பத்திரமாகவே உள்ளன.இதே போல மக்களின் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு சமூக தளங்களையும் ஆய்வு செய்தால்தான் அவற்றின் உண்மை  நிலை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இது இணையவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.