மல்லிபட்டினத்தில் மின்கம்பம் மீது கார் மோதி மின்கம்பம் முறிந்து சாய்ந்தது.
மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் கலீல். இன்று இவரது காரில் மல்லிபட்டினம் ராமர் கோவில் வழியே சென்றுகொண்டிருந்தார். கார் மளிகை கடை அருகே வந்த போது அதே சாலையில் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால்வண்டியால் நிலை தடுமாறி அருகே இருந்த மின்கம்பத்தில் கார் மோதியது. இதில் மின்கம்பம் கிழே சாய்ந்து மின்கம்பியில் தொங்கியது. கார் மோதியதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
அப்பொழுது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த யூசுப் மீது மின்கம்பம் விழுந்ததில் யூசுப்புக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவலறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்இணைப்பை துண்டிப்பு செய்தனர். விபத்தின் போது அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பம் சேதமடைந்ததால் இந்த பகுதிக்கு செல்லும் மின்இணைப்பு சில மணி நேரங்கள் துண்டிப்பு செய்யப்பட்டன. இந்த திடீர் விபத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
நன்றி:மல்லிபட்டினம்.இன்
மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் கலீல். இன்று இவரது காரில் மல்லிபட்டினம் ராமர் கோவில் வழியே சென்றுகொண்டிருந்தார். கார் மளிகை கடை அருகே வந்த போது அதே சாலையில் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால்வண்டியால் நிலை தடுமாறி அருகே இருந்த மின்கம்பத்தில் கார் மோதியது. இதில் மின்கம்பம் கிழே சாய்ந்து மின்கம்பியில் தொங்கியது. கார் மோதியதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
அப்பொழுது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த யூசுப் மீது மின்கம்பம் விழுந்ததில் யூசுப்புக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவலறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்இணைப்பை துண்டிப்பு செய்தனர். விபத்தின் போது அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பம் சேதமடைந்ததால் இந்த பகுதிக்கு செல்லும் மின்இணைப்பு சில மணி நேரங்கள் துண்டிப்பு செய்யப்பட்டன. இந்த திடீர் விபத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
நன்றி:மல்லிபட்டினம்.இன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.