.

Pages

Thursday, October 29, 2015

அதிரையில் புதிய உணவகத்தை சேர்மன் திறந்து வைத்தார் !

அதிரையை சேர்ந்தவர் பிஎம்ஏ ஹாஜா முகைதீன். இவர் அதிரை பேருந்து நிலையம் ஈசிஆர் சாலை பவித்ரா திருமணம் மண்டபம் அருகில் 'A1 ஸ்டார் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் புதிதாக உணவகத்தை தொடங்கியுள்ளார்.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 'திரீ ஸ்டார் ஜிம்' நிறுவனர் பிஎம்ஏ நஜ்முதீன் தலைமை வகித்தார். காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், உதவி பேராசிரியர் அப்துல் ரஹ்மான், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சாரா அஹமது, ஏவிஎம் சாகுல் ஹமீது, கே. பஜ்ருல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் உணவகத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் முன்னதாக உணவக உரிமையாளர் பிஎம்ஏ ஹாஜா முகைதீன் அனைவரையும் வரவேற்றார். திறப்பு நாளான இன்று ஏராளமானோர் உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி சென்றனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் 'பிஎம்ஏ ஹாஜா முகைதீன்' நம்மிடம் கூறியதாவது...
'எங்கள் உணவகத்தில் காலை நேரத்தில் சுடச்சுட பூரி, இட்லி, தோசை, வடை, சமூசா, புரோட்டா குருமா வகைகளும் பகலில் சாப்பாடு, சிக்கன் - மட்டன் பிரியாணி வகைகளும், இரவு நேரங்களில் சைனீஸ் புட், ஃபாஸ்ட் புட், புரோட்டா, சப்பாத்தி, தோசை ஆகியன தயார் செய்து கொடுக்க இருக்கிறோம். மேலும் அனுபவமிக்க மேஸ்திரிகளை வைத்து சுத்தமாகவும் சுவையானதாகவும் குறித்த நேரத்தில் உணவுகள் தயார் செய்து தரப்படும். மேலும் டீ, காபி ஆகியன தயார் செய்து வழங்க இருக்கிறோம். எங்கள் உணவகத்தில் அஜினாமோட்டா உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு செயற்கை சுவையூட்டியும் பயன்படுத்துவது இல்லை. எங்கள் புதிய உணவகத்திற்கு அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 9003983243 / 9944922949 /  8220203334
 

 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

  1. வளமுடன்வளரவாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.