.

Pages

Wednesday, October 21, 2015

திருச்சியில் பயங்கர பஸ் விபத்து: 10 பேர் பலி ( படங்கள் )

திருச்சி, இருங்களூர் அருகே, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உள்ள தனியார் கல்லூரி அருகே இரவு, 9.40 மணியளவில், சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த, அரசு விரைவு பஸ், சாலையில் நின்று கொண்டிருந்த இரும்பு பிளேட் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில், பஸ்சின் ஒரு பகுதி, முற்றிலும் சேதமடைந்தது. இதில், பயணம் செய்த பயணிகள், 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ்சின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் இருவரது உடல்அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுவன் , 6 ஆண்கள், 2 பெண்கள் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில், மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஐ.ஜி., ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தில், மீட்பு பணிகள் விரைந்து நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
 
செய்தி:நக்கீரன்
படங்கள்:நக்கீரன், நியூஸ் 7 தமிழ் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.