அதிராம்பட்டினம் அக். 15
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதே போல் அதிரையை அடுத்து காணப்படும் கடற்கரையோர பகுதிகளாகிய மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கட்டுமாவாடி உள்ளிட்ட துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட் என கருதப்படும் கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
இன்று காலை அதிராம்பட்டினம் கடலில் பிடிபட்ட புள்ளி திருக்கை மீன் கடைத்தெரு பெரிய மார்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. சுமார் 200 கிலோ எடை கொண்ட ராட்சஷ திருக்கை மீனை வாடிக்கையாளர்கள் வியப்புடன் பார்வையிட்டனர். இறுதியில் ரூ 12,000 த்திற்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து அதிராம்பட்டினம் மீன் வியாபாரி முகம்மது மொய்தீன் கூறுகையில்,
'திருக்கை மீனில் கருந்திருக்கை, முன்டாங்க்கனி திருக்கை, முள்ளந் திருக்கை, ஆடா திருக்கை, குருவி திருக்கை, வலுவாடி திருக்கை, பால் திருக்கை, கொம்பு திருக்கை, பூவா திருக்கை என பலவகை இருக்கிறது. இதில் புள்ளி திருக்கை மீனை அதிரை பகுதி பொதுமக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். திருக்கை மீன் மருத்துவ குணம் வாய்ந்தது. முள் இல்லாதது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பத்திய உணவாக பயன்படுகிறது. மேலும் மீன் எண்ணை தயாரிக்கவும், இதன் செவில்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது' என்றார்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதே போல் அதிரையை அடுத்து காணப்படும் கடற்கரையோர பகுதிகளாகிய மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கட்டுமாவாடி உள்ளிட்ட துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட் என கருதப்படும் கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
இன்று காலை அதிராம்பட்டினம் கடலில் பிடிபட்ட புள்ளி திருக்கை மீன் கடைத்தெரு பெரிய மார்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. சுமார் 200 கிலோ எடை கொண்ட ராட்சஷ திருக்கை மீனை வாடிக்கையாளர்கள் வியப்புடன் பார்வையிட்டனர். இறுதியில் ரூ 12,000 த்திற்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து அதிராம்பட்டினம் மீன் வியாபாரி முகம்மது மொய்தீன் கூறுகையில்,
'திருக்கை மீனில் கருந்திருக்கை, முன்டாங்க்கனி திருக்கை, முள்ளந் திருக்கை, ஆடா திருக்கை, குருவி திருக்கை, வலுவாடி திருக்கை, பால் திருக்கை, கொம்பு திருக்கை, பூவா திருக்கை என பலவகை இருக்கிறது. இதில் புள்ளி திருக்கை மீனை அதிரை பகுதி பொதுமக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். திருக்கை மீன் மருத்துவ குணம் வாய்ந்தது. முள் இல்லாதது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பத்திய உணவாக பயன்படுகிறது. மேலும் மீன் எண்ணை தயாரிக்கவும், இதன் செவில்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.